games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா 2023

இறுதிக்கு முன்னேறுவது யார்?
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இன்று மோதல்

10 அணிகள் பங்கேற்ற 13-ஆவது சீசன் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் அக்., 5 அன்று தொடங்கியது. 10 மைதானங்களில் கடந்த 40 நாட்களில் 45 லீக் ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா,  நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, நெதர்லாந்து, இலங்கை, வங்கதேசம் ஆகிய 6 அணிகள் வெளியேறிய நிலையில், புதனன்று  அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான இந்திய அணியும்,  கடந்த முறை நூலிழையில் கோப்பையை நழுவவிட்ட நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

யாருக்கு வாய்ப்பு?

இரு அணிகளிலும் பலமான வீரர்கள் இருந்தாலும் வீரர்களின் செயல்பாட்டில் இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. சொந்த மண் என்ற ஆதிக்க நிலை மற்றும் பேட்டிங், பந்துவீச்சு, ஆல்ரவுண்டர் மற்றும் பீல்டிங் என 4 நிலை களிலும் அசுர பலத்தில் இருப்பதால் இதுவரை தான் விளை யாடிய 9 லீக் ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்து, தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது இந்தியா. மேலும் அனைத்து அணிகளிடம் விளையாடி வெற்றி யை ருசித்த அனுபவம் மற்றும் தன்னம்பிக்கை இருப்பதால் அரையிறுதியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்துவதற்கான கூடுதல் பலனை இந்திய அணிக்கு பெற்றுத் தரும்.  பலத்த அடி வாங்கி, கடும் போராட்டத்துக்கு இடையே அரை யிறுதிக்கு முன்னேறியுள்ளது நியூஸிலாந்து அணி. இந்திய அணி ஆதிக்கத்துடனும், நியூஸிலாந்து அணி போராட்டத்து டன் என இரு அணிகளும் வெவ்வேறு அனுபவ திசைகளில் அரையிறுதிக்கு முன்னேறி இருப்பதால் அரையிறுதியில் யாருக்கு வெற்றி என திடமாக ஆருடம் கூட கூற முடியாது. கடந்த 2019 உலகக்கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது நியூஸிலாந்து அணி. இதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி யும், லீக் ஆட்டத்தில் பதிலடி கொடுக்கவும், கடந்த சீசனை போல் அல்லாமல் இம்முறை கண்டிப்பாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் நியூஸிலாந்து அணியும் என இரு அணிகளும் பதிலடி வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் முதல் அரை யிறுதி ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படு கிறது.

இந்தியா      நியூஸிலாந்து

வெற்றி வாய்ப்பு

50%                 50%

நேரம் : மதியம் 2:00 மணி
இடம் : வான்கடே மைதானம், மும்பை, மகாராஷ்டிரா
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஒடிடி - ஹாட்ஸ்டார் (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும். ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)
மழை : வாய்ப்பில்லை

வெளியேறிய அணிகளும்... காரணங்களும்... (2)

நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்ற நிலையில், சொதப்பலான ஆட்டம் மற்றும் பார்ம் பிரச்சனை காரணமாக முன்னாள் சாம்பியன் உட்பட 6 அணிகள் வெளியேறின. திங்களன்று முதல் 3 அணிகளின்  (புள்ளிப்பட்டியல்) வெளியேற்ற காரணம் வெளியிடப்பட்ட நிலையில், கடைசி 3 அணிகளின் வெளியேறிய காரணங்களை இன்று காணலாம்:

வங்கதேசம்

இரண்டாம் நிலையில் முதல்தர அணியாக வளர்ந்து வரும் வங்கதேச அணியில் பலமான வீரர்கள் இருந்தும் படுமோசமான ஆட்டத்திறனால் அந்த அணி வெளி யேறியது. தேவையில்லாத விஷ யங்களில் ஈடுபாடுடன் இருந்த வங்க தேச கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் அணியை மாறுப்பட்ட பாதைக்கு அழைத்துச் செல்வதில் கோட்டை விட்டார். இதன் காரணமாகவே முதல் அணியாக வெளியேறியது.

இலங்கை

உலகக்கோப்பை வெளியேற்றம் தொடர்பாக இலங்கை அணியை விமர்சிக்க ஒன்றும் இல்லை.  முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினர். அனுபவம் இல்லாத இளம்வீரர்களை வைத்து போராடியது பெரிய விஷயம்தான்.

நெதர்லாந்து

கிரிக்கெட் விளையாட்டிற்கு சம்மந்தம் இல்லாத நாடான நெதர்லாந்து அணி, நாங்களும் கிரிக்கெட்டில் “தூள் கிளப்புவோம்” என்ற சொல்லுக்கு ஏற்ப நடப்பு சீசன் உலகக்கோப்பையில் தனது அபார ஆட்டத்தால் எதிரணி களை ஒரு மிரட்டு மிரட்டி விட்டுச் சென்றுள்ளது. கிரிக்கெட் உலகின் அதிரடி அணியான தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதே அந்த அணிக்கு உலகக் கோப்பையை கைப்பற்றியது போன்ற சிறப்பை பெற்றுத் தரும்.