games

img

விடைகொடுத்த கரீபியன் புயல்!

“கிரிக்கெட் மைதானத்தில் களம் இறங்கிவிட்டால் வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சா ளர்கள் என எந்த பாகுபாடும் பார்ப்பது கிடையாது.  யார் வீசினாலும் மட்டையை மட்டுமே சுழட்ட தெரியும். நின்று ஆடத் தொடங்கி விட்டால் ருத்ர தாண்டவம் தான். பந்துகளை வானத்தில் பறக்க விட்டு வேடிக்கை காட்டுவதில் அவ ருக்கு அப்படி ஒரு அலாதி பிரியம். அது எந்த  பந்தாக இருந்தாலும் இவரது பேட்டில் பட்டால் சிக்ஸராக எல்லைக் கோட்டை பறந்து செல்லும்’’.

அது அவரால் மட்டுமே முடியும்

22 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கரீபியன் தீவையும் தாண்டி உலக ரசிகர்களின் முடிசூடா மன்ன னாக வலம் வந்த அசூரன், கரீபிய சிங்கம், சூறாவளி புயல் அது. 41 வயதிலும் அவரால் பறக்கவிடப்பட்ட சிக்ஸர்களை பார்ப்பதற்காக கூடிய ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.  கிரிக்கெட் களத்தில் அவர் பேட்டை எடுத்து வந்து விட்டாலே பந்து வீச்சாளர்களின் கை,  கால்கள் தானாகவே நடுங்கும். அவர் அடிக்கும் பந்துகளை பிடிக்க நினைக்கும் பில்டர்கள் ரசிகர்களுடன் கேலரியில் தான் அமர வேண்டும். அவரது சிக்ஸர் வாணவேடிக்கையை பார்த்து பரவசமடைந்த ரசிகர்கள் அவருக்கு வைத்த செல்லப் பெயர் ‘யுனிவர்சல் பாஸ்’. டி-20 போட்டிகளில் சதம், ஒருநாள் ஆட்டத்தில் இரட்டை சதம், டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை முச்சதம் அடித்த ஒரே வீரரும் இவரே.

இளமையும் - வறுமையும்

அவர்தான் கரிபீயன் தீவுகளில் உள்ள ஜமைக்காவின் கிங்ஸ்டனில் பிறந்த கிறிஸ்டோபர் ஹென்றி கெயில். கிறிஸ் கெயிலுடன் பிறந்தது ஐந்து பேர். தந்தை ஒரு போலீஸ்காரர். அவருக்கு வருமானம் மிக மிகக் குறைவு. அது குடும்ப வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை.  தெருவோரங்களில் தின்பண்டங்களை விற்பனை செய்து அதில் கிடைத்த சொற்ப தொகையை குடும்பத்திற்கு செலவழித்து வந்தார் கிறிஸ் கெய்லின் தாய் ஹேசல். உள்ளூர் கிரிக்கெட் அணியில் மட்டும் இடம் கிடைக்காமல் இருந்திருந்தால், தனது நண்பர்கள், சகோதரர் களுடன் தெருத்தெருவாக சுற்றி திரிந்து கொண்டிருப்பேன் என்று பலமுறை நினைவு படுத்தியிருக்கிறார். குடும்பத்தின் வறுமை காரணமாக பள்ளிப் படிப்போடு நிறுத்திவிட்டார். தெருவோர சிறு வர்களுடன் தினமும் கிரிக்கெட் விளையாடி வந்த கெயில், உள்ளூர் போட்டி ஒன்றில் விளை யாட லூகாஸ் அணி கேப்டனிடம் கிரிக்கெட் மட்டையை (பேட்) கடன் வாங்கியுள்ளார். அந்த  ஆட்டத்தில் ‘‘100 ரன்களை அடித்தால் பேட்டை  நீ எடுத்துக் கொள்ளலாம்’’ என லூகாஸ் அணி கேப்டன் நிபந்தனை விதித்திருக்கிறார். விலை உயர்ந்த கிரிக்கெட் பேட்டை கையில் பிடித்ததும் ஆட்டம் வெறித்தனமாக மாறியது. பந்துகள் நாலாபுறமும் பறந்தன. அதிரடி யாக 100 ரன்களை கடந்தார். அந்த கிரிக்கெட் மட்டையும் சொந்தமானது. இதனால், லூகாஸ் கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்து.  தனது 19-வது வயதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக உள்ளூர் ஆட்டத்தில் ஜமைக்கா கிரிக்கெட் வீரராக அறிமுகமாகிய கிறிஸ் கெயில், கடின உழைப்பால் மேற்கிந்திய தீவுகள்  அணியில் இடம் பிடித்து இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

ஏறுமுகம்

ஆரம்ப காலங்களில் நிதானமாக ‘‘அம்பியாக’’ இருந்தவர், பிறகு அசுரத்தனமான  ஆட்டத்தால் ‘‘அந்நியனாக’’ மாறினார். டி20 ஓவர் கிரிக்கெட் அறிமுகமானதும் அவரது லெவலே வேறு மாதிரியாக இருந்தது. ‘கட்டு மஸ்தான்’ உடலை கொண்டு ஒவ்வொரு பந்தையும் சிக்ஸராக மாற்றி பந்து வீச்சாளர்களை அலற விட்டார்.  இந்திய சுற்றுப் பயணத்தில், பேட்டிங் செய்துக் கொண்டிருந்தபோது திடீரென்று வெளி யேறினார். பரிசோதனையில் அவரது உயி ருக்கு ஆபத்தாக இருந்த இருதயநோய் பற்றி  சிறிதும் கவலைப்படவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி கிரிக்கெட் மட்டையை திரும்பவும் கையில் எடுத்து உறுதியான மனிதர் என்பதை நிரூபித்துக் காட்டினார். 

சாதனை மேல் சாதனை

கிரிக்கெட் விளையாட்டில் விஸ்வரூபம் எடுத்த கிறிஸ் கெயில், மூன்று ஆண்டுகாலம் மேற்கிந்திய தீவுகள் அணிகளின் டெஸ்ட் அணிக்கு கேப்டனாகவும் இருந்திருக்கிறார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் ஆட்டத்தில் சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்த அவர்,  ஜமைக்கா, ஸ்டான்போர்ட் சூப்பர் ஸ்டார்ஸ்,  ஐசிசி வேர்ல்ட் லெவன்,  மேற்கு ஆஸ்திரேலியா,  சிட்னி தண்டர், டஸ்கர்ஸ், வொர்செஸ்டர் உள்ளிட்ட ஏராளமான அணிகளில் விளையாடி யுள்ளார்.  ஐபிஎல் விளையாட்டில் 66 பந்துகளை எதிர் கொண்டு 17 சிக்சர்களை பறக்கவிட்டு 175 ரன்கள்  குவித்து சாதனை படைத்தார். அந்த ஆட்டத்தில் பந்துவீசிய புனே அணி வீரர்கள் நொந்து போனார்கள். நேரிலும் தொலைக் காட்சிகளி லும் பார்த்த பந்து வீச்சாளர்கள் பலரும் கதிகலங்கிப் போனார்கள். 

உதவும் கரம்

ஐபிஎல் தொடரில் இருந்து தன்னை கழட்டி விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 55 பந்துகளில் 102 ரன்கள் குவித்து பந்து வீச்சாளர்களை திணற அடித்தார்.  ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் இரட்டை சதம் அடித்த முதல் நபரும் இவர்தான். உலக கோப்பையின் ஒரு தொடரில்  50 சிக்சர்களை விளாசியவரும் இவரே. டெஸ்ட் போட்டி வரலாற்றில் முதல் பந்திலேயே சிக்ஸர்  அடித்து உலக சாதனை படைத்ததும் கெயில்தான். இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 333 ரன்கள் குவித்து இறுதி  வரையிலும் அவுட் ஆகவில்லை. இந்த ‘333’ அவரது ஜெர்ஸியை அலங்கரித்தது. ஒரு நாள் ஆட்டங்களில் 10,500, டெஸ்ட்  போட்டிகளில் 7,200, இருபது ஓவர் போட்டிகளில் 1,900 என்று சுமார் 19,000 ரன்கள், மூன்றுவித மான போட்டிகளிலும் 200க்கும் அதிகமான விக்கெட்டுகளை சார்ந்தவர் என்கிற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்றாலும் ஒரு சில சர்ச்சைகளுக்கும் சிக்கிக் கொண்டதும் உண்டு. 2015ஆம் ஆண்டில் ‘கிறிஸ் கெயில் அகாடமி’ தொடங்கி சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு பலவகை யிலும் உதவி செய்து வருகிறார். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அவர்  அடித்த சிக்ஸர் ஒன்று கேலரியில் பார்த்துக்கொண்டிருந்த சிறுமியின் மூக்கை பதம் பார்த்தது. ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமியை சந்தித்து ஆறுதல் கூறியது மட்டுமல்ல, அந்த ஆட்டத்தில் அவருக்கு வழங்கிய  ‘மேன் ஆப் தி மேட்ச்’ பரிசு தொகை முழுவதை யும் அந்த சிறுமிக்கு வழங்கினார்.

விடை கொடுத்தார்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு  என்பதை ஜமைக்காவில் மண்ணின் மைந்தர்கள் முன்னிலையில் விளையாடி அறிவிக்க வேண்டும் என்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறார். அதுவரைக்கும், ஐபிஎல் தொடரில் விளை யாடிக் கொண்டிருப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.  2009ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் களமிறங்கி பெங்களூரில் உருவாகி, பஞ்சாப் வரை சுழற்றி யடித்த அந்தப் புயல், 2022 ஐபிஎல் தொடருக் கான ஏலப் பட்டியலில் பெயர் கொடுக்காமல் விட்டிருக்கிறது. தனது ருத்ர தாண்டவத்தால் கிரிக்கெட் வர லாற்றில் இமாலய சிக்ஸர்கள், அதிரடி  சதங்களால் இறுதிவரைக்கும் கெத்து காட்டி தொடர்ந்து மகிழ்வித்து, ரசிகர்கள்  மனதில் நீங்கா இடம் பிடித்து ஜாம்பவான், இனி இந்தியப் பெருங்கடலை  சீண்டப்போவதில்லை. ஒரு மிகப்பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்திருக் கிறது. 

- சி.ஸ்ரீராமுலு