உலகக்கோப்பை முடிந்த கையோடு ஆஸ்திரேலிய அணி தாய்நாட்டிற்கு செல்லாமல் இந்தியா விலேயே தங்கி 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. விசாகப்பட்டினத்தில் வியாழனன்று நடைபெற்ற முதல் டி-20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியா சத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2-ஆவது டி-20 போட்டி விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றும் திசையை நோக்கி பயணிக்கும் முனைப்பில் இந்திய அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் என இரு அணிகளும் வெற்றியை நோக்கமாக கொண்டு களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா
இடம் : கிரீன்பீல்ட் மைதானம், திருவனந்தபுரம், கேரளா
நேரம் : இரவு 7:00 மணி
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் சினி பிளக்ஸ்,
ஜியோ சினிமா (ஓடிடி - இலவசம்)
எல்லாம் அம்பானிக்கு என்றால் அரசுக்கு சொந்தமான தூர்தர்சன் எதற்கு இருக்கிறது?
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளின் டி-20 தொடர் நேரலை யாக ஓடிடி சேர்த்து மொத்தம் 3 பிரிவு சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதாவது ஒளிபரப்பு செய்யப்படும் தொலைக்காட்சி சேனலான ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் சினிபிளக்ஸ் மற்றும் ஓடிடி பிரிவான ஜியோ சினிமா ஆகிய மூன்று நிறுவனங்களும் மோடியின் நெருங்கிய நண்பர் அம்பானிக்கு சொந்தமானது ஆகும். இந்திய பொதுத்துறை ஒளிபரப்பு நிறு வனமான தூர்தர்சன் இருக்கும் பொழுது ஸ்டார்ஸ் போர்ட்ஸ் நிறுவனம் ஏலத்தில் கைவிட்ட கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு ஒளிபரப்பு உரிமை வழங்குகிறது. அமித் ஷா மகன் ஜெய் ஷா நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்த விவகாரம் நாள்பட்ட சர்ச்சையாக உள்ள நிலையில், மோடி அரசு கண்டுகொள்வதாக தெரியவில்லை.
கலர்ஸ் சினி பிளக்ஸ்?
கலர்ஸ் தொலைக்காட்சி பற்றி அனை வருக்கும் தெரியும். தமிழில் திரைப்படம் மற்றும் சீரியல்களை ஒளிபரப்புகின்றன. ஆனால் கலர்ஸ் சினி பிளக்ஸ் சேனல் இருப்பதே தெரி யாது. கலர்ஸ் சினி பிளக்ஸ் இந்தி சேனல் ஆகும். முகேஷ் அம்பானிக்குச் சொந்த மான “வியாகோம் 18” நிறு வனத்தின் துணை நிறுவனம் தான் கலர்ஸ் சினி பிளக்ஸ் ஆகும். இந்த சேனல் அனைத்து மொழிகளிலும் இயங்கும் நெட்வொ ர்க்கை கொண்டு இருக்கவில்லை என்றாலும் பிசிசிஐ ஒளிபரப்பு உரிமம் வாங்கியுள்ளது. தற்போது இந்தியா - ஆஸ்திரேலிய டி-20 தொடர் ஒளிபரப்பு விஷயம் வெளியான பொழுதுதான் கலர்ஸ் சினி பிளக்ஸ் ஒளிபரப்பு விஷயம் தெரியவந்துள்ளது.
மிட்செல் மார்ஷ் இந்தியாவில் காலடி வைக்கக் கூடாதாம்
விளையாட்டு உலகில் கலகலப்பை ஏற்படுத்திய இந்துத்துவா சார்பு சமூக ஆர்வலரின் புகார்
13-ஆவது சீசன் உலகக்கோப்பை யில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6-ஆவது முறை யாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி உலகக்கோப்பையை வென்றால் மக்களவை தேர்தல் பிரச்சா ரத்தின் ஒரு நிகழ்வாக பிரதமர் மோடி பிரம்மாண்ட திட்டம் ஒன்றை மறை முகமாக வைத்து இருந்தார். இந்திய அணியின் தோல்வியால் திட்டம் எல்லாம் கானல் நீரைப்போன்று காணா மல் போக பாஜகவினர் ஆதங்கத்து டன் பல்வேறு சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆதாயம் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கொண்டாட்டத்தின் பொழுது உலகக்கோப்பையின் மீது கால் வைத்து மது அருந்தினார். இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள இந்துத்துவ சார்பு சமூக ஆர்வல ரான உத்தரப்பிரதேசத்தின் பண்டிட் கேசவ்,”மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பை மீது கால் வைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதை புண் படுத்திவிட்டார். இதனால் மிட்செல் மார்ஷ் இனி இந்தியாவில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கக் கூடாது” என அலிகார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் புகார் மனுவின் பிரதியை பிரதமர் மோடிக்கும் அந்த நபர் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக அலிகார் காவல் துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் சமூகவலைத்தளங் களில் கடும் கிண்டலுக்குஉள்ளாகியுள்ளது.