கிரிக்கெட் விளை யாட்டில் வீரர்களின் செயல்திறனை அறிய “யோ யோ” என அழைக்கப்படும் பிட்னஸ் டெஸ்ட் (சோதனை) நடத்தப்படும். இந்த “யோ யோ” சோதனையில் போது மான அளவில் மதிப்பெண் கள் பெற்று வெற்றி பெற்றால் மட்டுமே அணி தேர்வில் இடம்பிடிக்க முடியும். இது கால்பந்து விளையட்டு போ ன்று சற்று கடினமான சோ தனை என்ற நிலையில், வர விருக்கும் ஆசியக்கோப் பை, உலகக்கோப்பை கிரிக் கெட் தொடருக்காக இந்திய அணி நிர்வாகம் வீரர்களின் பயிற்சி திட்டத்தில் கடின மான செயல்முறையை பயன்படுத்தி கடந்த ஒரு மாத காலமாக “யோ யோ” மதிப்பெண் முடிவுகளை ஆராய்ந்து வருகிறது.
இந்நிலையில், 2 நாட்க ளுக்கு முன்னர் நான் “யோ யோ” டெஸ்ட் மதிப்பெண் 17.2 என விராட் கோலி இன்ஸ்டாகிராம் பதிவில் கூறி இருந்தார். “யோ யோ” மதிப்பெண்ணை வெளியில் கூறியது பிசிசிஐ ஒப்பந்த விதிகளை மீறும் செயல் என்ற கோலிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட தாக தகவல் வெளியாகிய நிலையில், இந்திய அணி யின் இளம் தொடக்க வீரர் சப்மன் கில் 18.7 மதிப்பெண் களை எடுத்து வெற்றிபெற் றார் என்ற தகவல் வெளி யாகியுள்ளது.
சப்மன் கில் சமூக வலை த்தளங்களில் வெளியிட வில்லை என்றால் “யோ யோ” மதிப்பெண் எப்படி வெளியானது என்ற சந்தே கம் வலுவாக உள்ளது. மேலும் கோலிக்கு “குட்டு” என்றால் சப்மன் கில் “யோ யோ” சோதனை மதிப்பெண் வெளியானது எப்படி? என ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.