games

img

இந்திய கிரிக்கெட்டுக்கு இதோ ஒரு பாலைவனப்புயல்

சி.ஸ்ரீராமுலு
சிறுமி ஒருவர் தன்னை நோக்கி வரும் பந்துகள் அனைத்தையும் கிரீசுக்கு வெளியே வந்து அதிரடி யாக சிக்ஸர், பவுண்டரி என்று அழகாக எல்லைக் கோட்டுக்கு வெளியே விரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  அந்த சிறுமி ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட் டத்தை சார்ந்தவர். கனசார் எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தவர். அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். பெயர் மூமல் மெஹரின். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் புயல் சூரிய குமார் யாதவ் போல் நாலாபுறமும் பந்தை பவுண்டரி, சிக்ஸர் என சிதறடிக்கும் அந்தச் சிறுமியின் காலில் செருப்புக்கூட இல்லை. 14 வயதே ஆகும் அந்தச் சிறுமியின் திறமையை சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளினார். அதன் பிறகு அந்த வீடியோ மேலும் வைரலானது. பிரபலங்கள் பலரும் அந்தச் சிறுமிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த அவரது தந்தை மாதர் கான் ஓர் ஏழை விவசாயி. அவருக்கு மூமல் மெஹரின் உட்பட எட்டு மகள்கள். இரண்டு மகன். மூத்த மகள் அனிதா தான் சிறுவயதில் இருந்து மூமல் மெஹரினின் அசாத்திய திறமையைக் கண்டு கிரிக்கெட் விளை யாட்டுக்கு ஊக்கம் கொடுத்துள்ளார். சகோதரர் அப்துல் ரசாக் தனது பங்களிப்பாக பள்ளிகள் மற்றும் மாவட்ட அள விலான போட்டிகளுக்கு அழைத்துச் சென்று வருகிறார். விளையாட்டில் அதிகம் ஈடுபாடு கொண்ட மெஹரின் கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டவர். இதனால் எப்படியும் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தினமும் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பியதும் மாலை நேரத்தில் கிராமத்து இளைஞர்களுடன் கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். 

 இவரது கிராமத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு நமது பகுதிகளை போன்ற புற்கள் நிறைந்த சமவெளி பகுதி கிடையாது. கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பும் அள வுக்கு அந்த குடும்பத்தில் பொருளாதார வசதிகள் கிடை யாது. இதனால் தனக்கு கிரிக்கெட் ‘கிட்’ வேண்டும் என்று ஒரு வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார். ஷூ கூட வாங்கிக் கொடுக்க முடியாத குடும்பத்தில் பிறந்ததால் பாலைவன மணல் திட்டில் வெறும் காலுடன் கிரிக்கெட் விளையாடி வந்த அந்தச் சிறுமியின் ஆர் வத்தை பார்த்த பள்ளி ஆசிரியர் ரோஷன் கான், தினமும் கிரிக்கெட்டின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார்.  தினமும் மூன்று நான்கு மணி நேரம் தொடர்ந்து மணல் திட்டில் பயிற்சி எடுத்து வந்த நிலையில், உள்ளூரில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத் தது. இந்தப் போட்டிகளில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி சிக்ஸர், பவுண்டரி என விளாசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சுட்டெரிக்கும் வெயிலில் கால்களுக்கு செருப்பு இல்லை என்பதை கூட கவலைப்படாமல் பாலைவன மணலில் கிராமத்து சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் அந்த சிறுமி மட்டையை சுழற்றி சுழற்றி அடிக்கும் ஒவ்வொரு ஷாட்டிலும் அவரது தீராத தாகத்தையும் வேகத்தையும் உணரலாம். கிராம பஞ்சாயத்து முதல் மாவட்டம் வரைக்கும் நடந்த போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த தொடரின் அரை இறுதிப் போட்டியில் ஆட்டம் இழக்காமல் இருபத்தி ஐந்து ரன்களை குவித்ததோடு ஏழு விக்கெட்டுகளையும் கைப்பற்றி முத்திரை பதித்தார்.  19 வயதுக்கு உட்பட்ட மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்று பெரும் புரட்சியை ஏற்படுத்திய இந்திய அணியின் சாதனைப் பயணம் ரசிகர்கள் அனை வரையும் வெகுவாக கவர்ந்தது. நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், 19 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற் கும் சேலஞ்சர் கிரிக்கெட் தொடருக்கான ராஜஸ்தான் அணியில் தனது தோழி அனிஷா தேர்வானது மூமல் மெஹரினுக்கு கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அதிகரித் துள்ளது. இந்தச் சிறுமியின் திறமை ராஜஸ்தானுக்கு பெருமை சேர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெண்கள் பிரிமியர் லீக் போட்டிக்கான ஏலம் நடை பெற்ற நிலையில் பரவிய மூமல் மெஹரின் வீடியோ அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அவரது அசாத்திய திறமையை பார்த்த பலரும் கிரிக்கெட் விளை யாடுவதற்கு தேவைப்படும் மட்டை, கையுறைகள், ஆடைகள் என அனைத்தையும் வாங்கி கொடுத்துள்ள னர். இன்னும் பலர் உதவ முன்வந்துள்ளனர். இது அவரை நெகிழ வைத்துள்ளது.  தனது கிரிக்கெட் கனவு நனவாகி வருவது அவருக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இப்போது காலில் ஷூ, கையுறை மற்றும் கிரிக்கெட் விளையாட்டுக்கான உடை உள்ளிட்ட அனைத்தையும் அணிந்து கொண்டு விளையாடி வருகிறார். முன்பைக் காட்டிலும் பல மடங்கு வேகம் எடுத்துள்ளார். தொடர்ந்து, தீவிரமாக பயிற்சி எடுத்து வருவதால் மெஹரின் திறமைக்கு வாய்ப்பளிக்க உள்ளூர் கிரிக்கெட் அணிகளும் கிரிக்கெட் சங்கங்களும் முன்வந்துள்ளன. கடுமையாக உழைப்பதன் மூலம், பெண்கள் கிரிக்கெட் டின் சச்சின் என்று வர்ணிக்கப்படும் மிதாலி ராஜ், இந்தி யாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த ஜூலான் கோஸ்வாமி, அதிரடி ஆட்டங்களால் ஆண்களுக்கு சலித்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்டி வரும் ஸ்ருமிதி மந்தனா, ஹர்மன் பிரீத் கவுர், தீப்தி சர்மா வரிசை யில் மெஹருக்கும் ஒரு இடம் கிடைக்கும் என்றும் இந்திய அணியில் ஜொலிப்பார் என்றும் எதிர்பார்க்கலாம்.