games

img

ஐசிசி மகளிர் உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு

ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் செயல்படுவார் என இந்திய கேப்டன் மிதாலி ராஜ் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.  

பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் மார்ச் 4 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறவுள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 6 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. இந்தியா, நியூசிலாந்து இடையிலான கடைசி இரண்டு மகளிர் ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணியின் துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டார்.    

இதுகுறித்து மிதாலி ராஜ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில்,  “கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டனாக தீப்தி சர்மா தேர்வு செய்யப்பட்டது தேர்வாளர்கள் மற்றும் பிசிசிஐயின் தேர்வாக இருந்தது. ஹர்மன்ப்ரீத் உலகக் கோப்பைக்கான துணைக் கேப்டனாக செயல்படுவார்" என்று கூறினார்.    

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-4 என்ற கணக்கில் தொடரை கடைசியாக இழந்தது குறிப்பிடத்தக்கது.