இன்றுடன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு
33ஆவது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. அனைத்து பிரிவு போட்டிகளும் ஏறக்குறைய நிறைவுபெற்ற நிலையில், மல்யுத்த பிரிவு மட்டுமே பாக்கி உள்ளன. மல்யுத்த பிரிவுகள் ஞாயிறன்று நிறைவு பெறும் நிலையில், அதோடு பாரீஸ் ஒலிம்பிக் தொடரும் நிறைவு பெறுகிறது. அதன்பிறகு திங்களன்று கோலாகல நிறைவு விழா நடைபெறு கிறது.
சாயம் போகுதா?
ஒலிம்பிக் பதக்கம் தரமாக இல்லை ; அமெரிக்க வீரர் குற்றச்சாட்டு
பாரீஸ் ஒலிம்பிக்கில் நைஜா ஹஸ்டன் என்ற அமெரிக்கா வைச் சேர்ந்த ஸ்கேட்டிங் வீரர் ஜூலை 29 அன்று வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இவர் பதக்கத்தை வென்று அமெ ரிக்கா சென்ற ஒரே வாரத்தில் வெண்கலப்பதக்கத்தின் நிறம் மாறியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இதற்கான படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணுக்கும், ஆணுக்கும் வித்தியாசம் இல்லையா?
அமன் விவகாரம் மூலம் வினேஷின் பிரச்சனையை மூடி மறைக்க திட்டம்?
இந்திய மல்யுத்த நட்சத்திர வீரா ங்கனை வினேஷ் போகத் பாரீஸில் அசத்தலான ஆட் டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இறுதிச் சுற்றுக்கு முன்னதாக 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். முன்னாள் பாஜக எம்.பி., பிரிஜ் பூஷணின் பாலியல் வன்கொடு மைக்கு எதிராக போராடியதன் கார ணமாகவே அரசியல் சூழ்ச்சியால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய் யப்பட்டு இருக்கலாம் என பல் வேறு சந்தேகங்கள் எழுந்து வரு கின்றன. மேலும் ஒலிம்பிக்கில் முன் னர் அரங்கேறிய ஆதாரமில்லா சம்ப வங்களை சுட்டிக்காட்டி வினேஷ் போகத் விவகாரத்தை மூடி மறைக்க பாஜக எம்.பி.,க்கள், “கோடி மீடியா” ஊடகங்கள் தீவிரமாக இறங்கி யுள்ளன. இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் கில் ஆடவர் 57 கிலோ மல்யுத்த பிரி வில் வெண்கலப்பதக்கம் வென்ற அமன் ஷெராவத், வெண்கலப் பதக் கத்திற்கான போட்டி நடைபெறும் முன்பு 61.5 கிலோ இருந்ததாகவும், பல்வேறு தீவிர பயிற்சிக்கு பின்னர் சரியான உடல் எடையுடன் அவர் போட்டியில் பங்கேற்றார் என தக வல் வெளியாகியுள்ளது. அமன் ஷெராவத் 4.5 கிலோ எடை குறைத்து நாட்டிற்காக வெண்கலப்பதக்கம் வென்றது மகிழ்ச்சியான விசயம் தான் என்றாலும், இந்த விவகாரத்தை வினேஷ் போகத் பிரச்சனையுடன் தொடர்புபடுத்தி அதனை மூடி மறைப்பது போன்று கூறுவது மிக வும் தவறானது ஆகும். அமன் விஷயத்தில் காட்டிய ஆர்வமும் முயற்சியும் வினேஷ் விஷ யத்தில் காட்டப்படாதது ஏன் என்ற கேள்வி எழுவது இயல்பானதே!
இதையெல்லாம் வினேஷிற்கு ஏன் செய்யவில்லை
அமன் எடையை குறைக்க 90 நிமி டங்களுக்கு இரண்டு மூத்த பயிற்சி யாளர்களுடன் இடைவிடா மல்யுத்தப் போட்டி, 1 மணி நேரம் வெந்நீர் குளியல், டிரெட்மில்லில் 1 மணி நேரம் தொடர்ச்சி யாக ஓட்டம், சானா குளியல் (sauna- bath) எனப்படும் வெப்ப சிகிச்சை, மசாஜ், மினி ஜாக்கிங், லிக்வார்ம் வாட் டர், எலுமிச்சை, தேன் மற்றும் காபி ஆகி யவை மட்டுமே உணவாக கொடுத்து உறங்கவிடாமல் பார்த்துக்கொண்டது இந்திய பயிற்சியாளர்கள் குழு. ஆனால் இதனை ஏன் வினேஷ் போகத்திற்கு செய்யவில்லை. அவரும் பதக்கப் போட்டியில் தானே பங்கேற்க இருந்தார் என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்வு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளியன்று இரவு நடை பெற்ற ஆடவர் 57 கிலோ மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் அமன் செராவத், போர்ட்டோ ரிக்கோ வீரர் டேரியன் டாய் குரூஸை 13-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெண் கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக (1 வெள்ளி, 5 வெண்கலம்) உயர்ந்துள் ளது.