games

img

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்து முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனை!  

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 250 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் என்கிற சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா.  

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 5ஆவது டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி, டி20 தொடரை 2-1 என வென்றது.

இந்நிலையில், இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசிய நிலையில், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தரமான பந்துவீச்சு தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்காத இங்கிலாந்து அணியினர் அடுத்தடுத்த ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இங்கிலாந்து அணி, 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜாஸ் பட்லர் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். 7.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து பும்ரா 6 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.  

இந்திய அணி 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதில் ரோகித் சர்மா 58 பந்துகளில் 5 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 76 ரன்களும், ஷிகர் தவான் 54 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் எடுத்தனர்.  

இந்த ஆட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 250 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா. இந்த சாதனை மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கேப்டன் ரோகித் சர்மா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி (351 சிக்ஸர்) முதல் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிறிஸ் கெயில் (331 சிக்ஸர்) இரண்டாவது இடத்திலும், இலங்கையின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா (270 சிக்ஸர்) 3வது இடத்திலும் உள்ளனர்.  

2வது ஒருநாள் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.