games

img

விளையாட்டு... ஐபிஎல் 2023

சென்னை ஸ்பெஷல்

சேப்பாக்கத்தில் தோனி என்ட்ரி அதிர்ந்த சென்னை நகரம் : அலறிய ஆப்பிள் கடிகாரம்

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதனன்று சென்னையில் நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை - தில்லி அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்த ஆட்டத்தின் சென்னை பேட்டிங்கின் பொழுது, 8-வது பேட்டராக தோனி களமிறங்கினார். தோனி கள மிறங்கிய உடன் மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் விண்ணே அதிரும்படி “தோனி”, “தோனி”  என முழங்கினர். ரசிகர்களின் இந்த முழக்கத்தால் சென்னை நகரமே குலுங்கியது. இதுபோக  விசில் சத்தம் வேறு தனியாக ஒலித்ததால் சென்னை சேப்பாக்கம் பகுதியில் மைக் செட்டுடன் இசை நிகழ்ச்சி நடக்கிறது என்ற சந்தேகம் எழும் அளவிற்கு சென்னை ரசிகர்கள் ஆதரவு மழை பொழிந்துள்ளனர்.

அலறிய ஆப்பிள் கடிகாரம்

தோனிக்காக சென்னை ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்பால் ஆப்பிள் கடிகாரம் அலறி யுள்ளது. மைதானத்தில் ரசிகர் ஒருவர் கையில் கட்டிருந்த ஆப்பிள் கடி காரம்,”சத்தமான சூழல் நிலவுகிறது. ஒலி அளவு 90 டெசிபல்களை தாண்டி யுள்ளது. இந்த நிலை 30 நிமிடங்கள் தொடர்ந்தால் தற்காலிக செவித்திறன் இழப்பை ஏற்படுத்தலாம்” என எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை ரசிகர்களின் ஆரவாரத்தால் ஆப்பிள் கடிகாரம் அலறிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பரிதாப நிலையில் தில்லி அணி

சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் சேப்பாக்கம்  மைதானத்தில் தில்லி ரசிகர்கள் மிக மிக குறைந்த அளவே இருந்தனர். அதாவது கிட்டத்தட்ட 98% (தோராயமாக) அளவில் சென்னை ரசிகர்கள் இருந்தனர். 2% அளவில் தில்லி ரசிகர்கள் மற்றும் ஸ்பான்சர் டிக்கெட் ரசிகர்கள் இருந்தனர். முக்கியமாக தங்களுக்கு எங்கே ஆதரவு இருக்கிறது என தேடும் அளவிற்கு  தில்லி அணி பரிதாப அளவில் விளையாடியது. 

சென்னை ரசிகர்கள் இதனை மாற்றிக் கொள்ள வேண்டும்

ஐபிஎல் தொடரில் தமிழ்நாடு அணியாகவும், தமிழின அணி யாகவும் கருதப்படும் சென்னை அணிக்கு அதிகளவில் ரசி கர்கள் உள்ளனர். புரியும்படி சொன்னால் ஐபிஎல் உலகில் அதிக ரசிகர்கள் கொண்ட அணி என்ற பெருமையை வைத்துள்ளது சென்னை அணி. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகில் சென்னை ரசிகர் களுக்கு “மஞ்சள் ஆர்மி” என புனைபெயர் வைக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டாலும் ஒரே ஒரு செயலால் அவர்கள் தங்கள் மதிப்பை லேசான அளவில் இழக்கின்றனர். அது யாதெனில் தோனியின் பேட்டிங்கை காண ஆவலுடன் மைதானத்திற்கு வந்த  சென்னை ரசிகர்கள், அவர் களமிறங்குவதற்காக பேட்டிங் செய்து  கொண்டிருக்கும் வீரர்களை ஆட்டமிழக்கக்  கூறி கத்துகின்றனர். இதனால் பேட்டிங் செய்யும் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். 

அனைவரும், வெற்றியும் முக்கியம்

தோனி மட்டுமல்ல சென்னை அணியில் உள்ள அனைவரும் முக்கியம் என நினைக்க வேண்டும். தோனியால் தனியாக எதையும் செய்ய முடியாது. 11 வீரர்கள் போராடினால்தான் வெற்றி கிடைக்கும். முக்கியமாக சென்னை ரசிகர்கள் தோனியின் ஆட்டத்தை மட்டுமே பெரிதாக நினைக்கின்றனர். ஆனால் சென்னை அணி தொடர் வெற்றி மூலம் சாம்பியன் பட்டம் வெல்வது மிக முக்கியமானது. சென்னை  அணி தொடர்ந்து வெற்றி பெற்றால்தான் இறுதிவரை சென்னை அணிக்காக ஆதரவு அளிக்க முடியும். இது நடக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த சென்னை வீரர்களுக்கும் ஆதரவு அளிப்பது அவசியம்.

இன்றைய ஆட்டம்

மும்பை - குஜராத்
இடம் : வான்கடே மைதானம், மும்பை
நேரம் : இரவு 7:30 மணி  
(சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா)