கொரோனா பாதுகாப்பு வளையம் இல்லாமல், ரசிகர்கள் அனுமதியுடன் நடைபெறும் ஐபிஎல் தொடர் தற்போது 30-வது லீக் ஆட்டங்களை கடந்து சுவாரஸ்யமாக நடைபெற்று வரும் நிலை யில், தில்லி அணி முகாமில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் மிட்செல் மார்ஷ், பிஸியோதெரபி நிபுணர் பேட்ரிக் உட்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தில்லி அணி தனிமைப்படுத்தப் பட்டு பயிற்சி திட்டம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ள தில்லி அணி தனது 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. புதனன்று நடைபெறும் புனேவில் நடைபெறும் இந்த ஆட்டம் மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இடமாற்றம் பற்றிய செய்தி மட்டுமே வெளியாகியுள்ளது. போட்டி கண்டிப்பாக நடைபெறும் என உறுதியாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ இது பற்றி எந்த கருத்தும் கூறவில்லை. தில்லி - பஞ்சாப் அணிகள் மோதும் 32-வது லீக் ஆட்டம் பற்றி போட்டி தொடங்கும் சில மணிநேரத்திற்கு முன்பு இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.