games

img

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்  

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நாதன் கோல்டர் நைல் விலகியுள்ளார்.  

15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் நைலை ரூ.1 கோடிக்கு தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.  இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 32 ஒருநாள் மற்றும் 28 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.    

32 வயதான நாதன் கோல்டர் நைல், இந்த வருட ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 3 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காமல் 48 ரன்கள் எடுத்தார்.    

இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நாதன் கோல்டர் நைல், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகியுள்ளார்.

இந்த தகவலை அந்த அணியின் பிசியோதெரபிஸ்ட் ஜான் க்ளோஸ்டர் உறுதி செய்துள்ளார்.