games

img

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று  

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.  

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது.  

இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.  இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாக பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சனிக்கிழமை நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் (RAT) அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது அணி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு பிசிசிஐ மருத்துவக் குழுவின் பராமரிப்பில் உள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.      

கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்க முடியுமா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

;