games

img

ஆஸ்திரேலிய அணியின் செயலால் வெடித்தது சர்ச்சை

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வரு கிறது. 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட்  தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி (“பாக்சிங் டே” டெஸ்ட்) மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் 2-வது நாளின் 3-வது சீசனில் வார்னருக்கு காலில் காயம் ஏற்பட்டது. காயத்திற்கு சிகிச்சை அளிக்க ஆஸ்திரேலிய பிசியோ தெரபிஸ்ட் குழு மைதானத்திற்கு வந்தது. வார்னர் நிற்க சிரமப்பட்டதால் சிகிச்சை அளிக்க  இருக்கை (சேர்) வசதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்னொரு இருக்கையையும் மைதானத்திற்குள் கொண்டு வந்து நன்றாக இருக்கும் ஸ்மித்தை இருக்கை யில் உட்கார வைத்தனர் ஆஸ்திரேலிய  உதவி வீரர்கள். மறுபுறத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் குளிர்பானங்கள் அருந்தி பேசிக்கொண்டிருந்தனர். சொந்த மண் என்பதால் ஆஸ்திரேலிய வீரர்களின் செயல்பாட்டை தென் ஆப்பி ரிக்க வீரர்கள் கண்டுகொள்ளவில்லை.  வெடித்தது சர்ச்சை எந்த விளையாட்டாக இருந்தாலும் அனைவருக்கும் சரிசமமாக அல்லது அவர்கள் விருப்பப்படி வேண்டியதை செய்ய வேண்டும். இதுதான் போட்டி யை நடத்தும் நாட்டின் பணி. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் வீரர்களுக்கு மட்டும் இருக்கை அளித்து விட்டு தென் ஆப்பிரிக்க அணி யை நிற்க வைத்தது தவறானது. இது  பாரபட்சமான செயல்பாடு ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக தென் ஆப்பி ரிக்கா அணி நிர்வாகம் எதுவும் கண்டுகொள்ளவில்லை என்பதால் புகாராக இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டங்கள்

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா
(2-வது டெஸ்ட், 4-வது நாள்)
நேரம் : காலை 5:00 மணி
3வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி
ஒரு விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்து, 
2-வது இன்னிங்ஸில் 371 ரன்கள் பின்னிலையுடன் உள்ளது.

\பாகிஸ்தான் - நியூசிலாந்து
(முதல் டெஸ்ட், 4-வது நாள்)
நேரம் : காலை 10:30 மணி
3-வது நாளின் 3-வது சீசனில் நியூசிலாந்து அணி 110 ஓவர்களில் 4 விக்., இழப்பிற்கு  ரன்கள் எடுத்திருந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்தது.