6-வது வெற்றியை ருசிக்குமா சென்னை?
இன்று ராஜஸ்தான் அணியுடன் மோதல்
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை அணி தொடக்கத்தில் திணறினாலும், 3-வது லீக் ஆட்டங் களுக்கு மேல் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது புள்ளிப்பட்டி யலில் 10 புள்ளிகளுடன் (7 ஆட்டங்க ளுடன்) முதலிடத்தில் கம்பீரமாகஉள்ளது. இந்நிலையில் தனது 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி ராஜஸ் தான் அணியை எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் ஏற்கெனவே ராஜஸ்தான் அணியுடன் மோதிய சென்னை அணி போராடி தோல்வி கண்ட நிலையில், வியாழனன்று மீண்டும் இரு அணி களும் மோதுகின்றன. கடந்த போட்டி யில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் சென்னை அணியும், மீண்டும் சென்னை அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறும் முனைப்பில் ராஜஸ்தான் அணி என இரு அணிகளும் வெற்றி யின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டம்
ராஜஸ்தான் - சென்னை
இடம் : ஸ்வாய் மான்சிங் மைதானம், ராஜஸ்தான்
நேரம் : இரவு 7:30 மணி
சேனல்
தொலைக்காட்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா
அணிகளின் நிலை எப்படி?
முன்னெப்போதும் இல்லாத அளவில் நடப்பு ஐபிஎல் சீசன் சற்று கூடுதல் சுவாரஸ்யத்துடன் நகர்ந்து வருகிறது. தற்போது 35 லீக் ஆட்டங்களை அதாவது நடப்பு சீசன் ஐபிஎல் தொடர் பாதிக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், எந்த அணி வலுவாக உள்ளது? எந்த அணி மந்தமாக உள்ளது என்பதை அணிகளின் விளையாட்டின் தரம் மூலம் கணக்கிடப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
வலுவாக உள்ள அணிகள் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான், குஜராத் ஆகிய 3 அணிகள் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த 3 அணிகளில் ஏதாவது ஒரு அணி கண்டிப்பாக நடப்பு சீசன் கோப்பையை வெல்லும் என கணிக்கும் அளவிற்கு முரட்டுத்தனமாக விளையாடி வருகிறது. மேற்குறிப்பிட்ட 3 அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களில் 1.சென்னை (10), 2.குஜராத் (10), 3. ராஜஸ்தான் (8) உள்ளன. 2-ஆம் தர அணிகள் லக்னோ, பஞ்சாப், பெங்களூரு, மும்பை ஆகிய 4 அணிகள் கிடைத்தால் வெற்றி, தோல்வி என சொதப்பலுடன் விளையாடி வருகிறது. லக்னோ, பஞ்சாப், பெங்களூரு அணிகள் புள்ளிபட்டியலில் டாப் ஆர்டரில் இருந்தாலும் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறது. 5 முறை சாம்பியனான மும்பை அணி நடப்பு சீசனில் என்ன செய்கிறோம் என தெரியாமல் விளையாடி வருகிறது. 2-ஆம் தர அணிகளின் புள்ளிப் பட்டியல் வரிசை : 4.லக்னோ (8), 5.பெங்களூரு (8), 6. பஞ்சாப் (8), 7.மும்பை (6) மந்தமான செயல்பாடு கொல்கத்தா, ஹைதராபாத், தில்லி ஆகிய 3 அணிகள் மிகவும் மந்தமான செயல்பாட்டுடன் அடிமேல் அடி வாங்கி வருகிறது. இந்த 3 அணிகளும் 7 ஆட்டங்களில் விளையாடி வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று, யார் கடைசி இடத்தை பிடிப்பது என போட்டி போட்டு வருகிறது. முக்கியமாக இந்த 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் ஆகும். ஹைதராபாத் அணி பந்துவீச்சில் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. அதனை சாதகமாக பயன்படுத்தினால் பிளே ஆப் வாய்ப்பு கிடைக்கலாம். கொல்கத்தா, தில்லி அணிகளுக்கு பிளே ஆப் கானல் நீர்தான். மந்தமான செயல்பாடு அணிகளின் புள்ளிப்பட்டியல் வரிசை : 8. கொல்கத்தா (4), 9. ஹைதராபாத் (4), 10. தில்லி (4)
6 பந்துகளில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்த யாஷ் தயாள் தீவிர மன அழுத்தத்தால் பாதிப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார்
ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் கொல்கத்தா அணிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணி வீரர் ரிங்கு சிங் தனி ஒருவராக போராடி அணியை வெற்றி பெற வைத்தார். குஜராத் சார்பில் இறுதி ஓவரை வீசிய யாஷ் தயாள் போட்டி நடைபெற்ற தினத்திலிருந்து தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உடல் நலமின்மையால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் சூழலில் உள்ளதாக குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். யாஷ் தயாள் விவகாரம் குறித்து ஹர்திக் பாண்டியா கூறியதாவது,”கொல்கத்தா அணிக்கெதிரான போட்டி நடைபெற்ற தினத்திலிருந்து (ஏப்., 9) யாஷ் தயாள் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு 7-8 கிலோ வரை குறைந்துள்ளார். தீவிர மன அழுத்தத்தோடு வைரஸ் தொற்றும் பாதிக்கப்பட்டுள் ளது. இதனால் யாஷ் தயாள் உடல்நிலை நோய் கட்டுப்பாட்டு நிலையில் உள்ளதால், அவரை மீண்டும் அணியில் விளையாட வைக்க கூடுதல் நாட்கள் ஆகலாம்” எனக் கூறியுள்ளார். யாஷ் தயாள் (25) உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.