இப்படியெல்லாம் கோரிக்கை வைத்தால் கிரிக்கெட் விளையாட முடியுமா?
பாகிஸ்தான் கோரிக்கைக்கு வலுக்கும் கண்டனம்
கிரிக்கெட் உலகின் முக்கிய தொடரான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் 13-வது சீசன் 50 ஓவர் உலகக் கோப்பை வரும் அக்டோ பர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியா வில் நடைபெறுகிறது. இந்த தொட ருக்கான வரைவு அட்டவணை வெளி யிடப்பட்டுள்ளது. போட்டி அட்டவணை யை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்னதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) மற்றும் பங்கேற்கும் நாடுகளுக்கு அனுப்பி தங்களது கரு த்தை தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணி 2 மைதானங்களில் விரும்பவில்லை என கருத்து தெரிவித்துள்ளது. ஆஸ்திரே லியாவுக்கு எதிராக பெங்களூருவிலும் (அக்டோபர் 20), ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சென்னையிலும் (அக்டோபர் 23) விளையாடும் வகையில் அமைக்கப் பட்டு இருக்கும் அட்டவணையை விரும்பவில்லை. சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கும், பெங்களூரு மைதானம் பேட்டிங்குக்கும் அனுகூல மாக இருக்கும் என்பதால் அந்த மை தானங்களில் இவ்விரு அணிகளுடன் மோதுவது தங்களது பலத்துக்கு சாதக மாக இருக்காமல் போகலாம் என அஞ்சுகிறோம். எனவே ஆப்கானிஸ்தா னுக்கு எதிரான ஆட்டத்தை பெங்க ளூருவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை சென்னைக்கும் மாற்றும்படி வலியுறுத்தியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
ஒரு சாம்பியன் அணி இப்படி கூறலாமா?
கிரிக்கெட் உலகில் 50 ஓவர் உலகக்கோப்பை (1992), டி-20 உலகக் கோப்பை (2009), ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (2017), ஆசிய சாம்பியன் (2000, 2012) ஆகிய சாம்பியன் பட்டங்களை வென்ற தலைசிறந்த அணியான பாகிஸ் தான் அணி இப்படி சிறுபிள்ளைத்தன மாக நாங்கள் அந்த மைதானத்தில் விளையாடினால் தோற்று விடுவோம், மைதானத்தை மாற்றுங்கள் என்று கூறுவது நியாயமற்றது. மேலும் இவ்வாறு கோரிக்கை விடுத்திருப்பது தொடர்பாக பாகிஸ்தான் அணிக்கு உள்நாட்டிலேயே கண்டனக் குரல் எழுந்து வருகிறது.
நியாயமற்றது
பாகிஸ்தான் தனது பாதுகாப்பு பிரச்சனைக்காக போட்டி இடத்தை மாற்ற கூறலாம். ஆனால் தனது பலம், பலவீனத்துக்கு தகுந்தபடி போட்டி நடைபெறும் இடத்தை மாற்ற கோர முடியாது. ஒருவேளை பாகிஸ்தான் அணிக்கு இடத்தை மாற்றினால் மற்ற அணிகளுக்கும் மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். பிறகு போட்டி அட்ட வணையை இறுதி செய்வதில் கடும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்ப தால் பாகிஸ்தான் அணியின் கோரிக்கை நிராகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.
டிஎன்பிஎல்
இன்றைய ஆட்டங்கள்
சென்னை - திண்டுக்கல்
மதியம் 3:15 மணி
திருச்சி - கோயமுத்தூர்
இரவு 7:15 மணி
இரண்டு ஆட்டங்களும் நத்தம் (திண்டுக்கல்) என்பிஆர் மைதானத்தில்.
நத்தம் என்பிஆர் மைதானம் செல்வது எப்படி?
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள உலுப்பகுடிக்கு அருகே உள்ளது என்பிஆர் மைதானம். இந்த மைதானத்திற்கு செல்ல மதுரையில் இருந்து வருபவர்கள் நத்தம் வழியாக இடதுபக்கம் திண்டுக்கல் சாலையில் செல்ல வேண்டும். திண்டுக்கல் வழியாக வருபவர்கள் நேரடியாக என்பிஆர் மைதானத்திலேயே இறங்கலாம்.
ஆட்டம் காட்டிய நாய்
நத்தம் என்பிஆர் மைதானத்தில் திங்களன்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் சென்னை - கோவை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் திடீரென உள்ளே புகுந்த நாய் மைதானத்தில் தனியாக ஒரு ஆட்டம் காட்டி, ஆட்டத்தை மேலும் பரபரப்பில் ஆழ்த்தி யுள்ளது. யாருக்கும் தொந்தரவு செய்ய வில்லை என்றாலும் நாயின் பார்வை வெறிநாய் போன்று இருந்ததால் வீரர்கள், பார்வை யாளர்கள் சற்று அச்சத்தில் இருந்தனர். ஆனால் உண்மையில் அந்த நாய் வெறிநாய் இல்லை. மைதானத்தில் இருந்தவர்களின் ஆரவரத்தால் அரண்டு அப்படி பார்த்துள்ளது.
இன்றைய உலகக்கோப்பை தகுதி சுற்று ஆட்டங்கள்
அயர்லாந்து - ஸ்காட்லாந்து
நேரம் : மதியம் 12:30 மணி
இடம் : குயின்ஸ் மைதானம், புலவாயோ
ஓமன் - ஐக்கிய அரபு அமீரகம்
நேரம் : மதியம் 12:30 மணி
இடம் : அதெல்ட் மைதானம், புலவாயோ