கொரோனா பரவல் முன்னெச்ச ரிக்கை காரணமாக மகாரா ஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ள நிலை யில், மும்பை நகரில் உள்ள வான்கடே, பாட்டில், பிராபோர்ன் மற்றும் புனே நகரில் உள்ள மராட்டிய சங்க மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 20 லீக் ஆட்டங்களுக்கு மேல் நிறைவு பெற்ற நிலையில், புனே மைதான த்தை தவிர மும்பையில் உள்ள 3 மைதா னங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளன. அதாவது பந்து எந்தவிதத்தில் வீசப்பட்டாலும் ஷார்ட் பிட்சாகவே (ரன் குவிப்புக்கு சாதக மாக) எழும்புகிறது. இதனால் பந்துவீச்சா ளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறுகின்றனர். சர்வதேச அனுபவம் இல்லாத வீரர்கள் கூட முரட்டுத் தனமான ஷாட்களை விளாசி வருவதால் பந்துவீச்சாளர்களின் பெயர்கள் படுமோசமாக விமர்சிக்கப்படுகிறது. இதற்கு காரணம் மைதானங்கள் என்பதை இதுவரை யாரும் உணரவில்லை. மும்பை மைதானங்களின் பிட்ச் மந்த மாகவே உள்ளது. ஒரு சில பந்துகள் மட்டுமே எழும்புகின்றன. ஏறக்குறைய இனிமேல் எது வும் செய்ய முடியாது. காலநிலை மாறினால் ஆடுகளத்தின் தன்மை சற்று மாறும். அவ்வாறு மாறவில்லை என்றால் ரன் குவிப்புக்கு மட்டுமே சாதகமான சூழல் ஏற்படும். அப்புறம் பந்து வீச்சாளர்கள் ரோபோ மாதிரி செயல்பட வேண்டியிருக்கும். இதற்கு பந்துவீச்சாளர் களை பயன்படுத்தாமல் பந்துவீசும் மிஷின் களை பயன்படுத்திவிடலாம். இன்னும் 30 லீக் ஆட்டங்கள் பாக்கி இருப்பதால் மும்பை மைதா னங்களின் நிலை எந்த வகையில் உள்ளது என்பதை போக போக தான் தெரியும்.