games

img

ரஞ்சி கோப்பையில் பீகார் வீரர் உலக சாதனை

நாட்டின் முதன்மையான முதல் தர போட்டியான (டெஸ்ட் தொடர்) ரஞ்சிக்கோப்பை தொடர் நடப்பாண்டு சீசனில்  குரூப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது.  பிளேட் குரூப்பில் பீகார் -  மிசோரம் இடை யிலான ரஞ்சி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பீகார் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மிடில் ஆர்டர் வீரராக களமிறங்கிய சஹிபுல் கனி (22) அறிமுக முதல்தர போட்டியில் முச்சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். சஹிபுல் கனி 405 பந்துகளில் 341 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  சஹிபுல் கனியுடன் ஜோடி சேர்ந்த பபுல் குமாரும் இரட்டைச் சதம் அடித்தார். கனி - பபுல் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 500 ரன்கள் குவித்து அசத்தினர்.

புரோ கபடி (இன்றைய ஆட்டங்கள்)
ஜெய்ப்பூர் - புனே (இரவு 7:30)
குஜராத் - மும்பை (இரவு 8:30)
பாட்னா - ஹரியானா (இரவு 9:30)

3 ஆட்டங்களும் பெங்களூருவில் நடைபெறுகிறது.