games

img

விளையாட்டு...

பெங்களூரு டெஸ்ட் நியூஸிலாந்து அணி அபார வெற்றி

3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. இந்த டெஸ்ட் தொட ரின் முதல் ஆட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெற்றது. “இந்தியா 46” டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு  செய்த இந்திய அணி, நியூஸிலாந்து  அணியின் இளம்  வேகப்பந்துவீச்சாளர் களான ஹென்றி (5 விக்கெட்டுகள்), வில்லியம் (4 விக்கெட்டுகள்) ஆகியோ  ரின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு சுருண்டது. அதன்பின்னர் ரச்சின் ரவிந்திராவின் (134 ரன்கள்) அபார சதத்தின் உதவி யால் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 356 பின்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சர்பிராஸ் கானின் (150 ரன்கள்) அபார சதம் மற்றும் ரிஷப் பண்ட்  (99), விராட் கோலி (70) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 99.3 ஓவர்களில் 462 ரன்களுக்கு ஆட்டமிழந்து, நியூஸி லாந்து அணியின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. ரச்சின் அபாரம் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி 0.4 ஓவர்களில் ரன்  கணக்கை துவக்காமல் இருந்த நிலை யில், விடுமுறை நாளான ஞாயிறன்று தொடர்ந்து 5ஆம் நாள் ஆட்டம் நடை பெற்றது. 100 ரன்களுக்குள் நியூஸி லாந்து அணியை சுருட்டி வெற்றி பெற இந்திய அணி பந்துவீச்சாளர்கள் வியூகம் அமைத்து ஆக்ரோஷமாக பந்துவீசினர். இதில் பும்ரா மிரட்டலான வேகத்தில் பந்துவீசி அச த்திய நிலையில், அவரது வேகத்திற்கு டாம் லதாம் (0), கான்வே (17)   இரை யானார்கள். எனினும் வில் யங் (48), ரச்சின் ரவிந்திரா (39) ஆகியோர் இந்திய  அணியின் தாக்குதல் பந்துவீச்சை சமாளித்து நியூஸிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்ற னர். இதில் இளம் வீரர் ரச்சின் ரவிந்தி ராவின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க நியூஸிலாந்து அணி 27.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0  என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

டெஸ்ட் போட்டியில் 107 மீட்டர் சிக்ஸரா?
வாயடைக்க வைத்த ரிஷப் பண்ட்

டெஸ்ட் போட்டி யில் மந்தமாக வும், ஒருநாள் போட்டி களில் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப அதிரடியாகவும், டி-20  போட்டிகளில் மிக அதிரடியாக விளை யாடுவது கிரிக்கெட் உலகின் மரபு ஆகும். புரியும்படி சொன்னால் டி-20 போட்டிகளில் சிக்ஸர் மழையும், ஒரு நாள் போட்டியில் சிக் ஸர் சாரலும், டெஸ்ட் போட்டியில் கானல் நீரைப் போன்று (சில  நேரங்களில்) சிக்ஸர்கள் பறக்கும். இதுதான் கிரிக் கெட் விளையாட்டின் இயல்பு. ஆனால் இதற்கு மாறாக டி-20 போட்டியை போன்று பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் 107 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் விளாசி பிரமிப்பை ஏற் படுத்தியுள்ளார். ரிஷப் பண்ட் அடித்த 107 மீட் டர் சிக்ஸர் காரணமாக பந்து மைதானத்திற்கு வெளியே சென்றுவிட்ட தால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது. டெஸ்ட் போட்டியில் 107  மீட்டர் சிக்ஸரா? என ரிஷப் பண்ட்டின் செய லால் இந்தியா, நியூஸி லாந்து வீரர்கள் மட்டு மின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே   அதிர்ச்சியில் உறைந்து ள்ளது. 

இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம்

சூப்பர் பார்மில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி பெங்களூரு டெஸ்ட் போட்டியில் படுதோல்வி கண்டதற்கு கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. பெங்களூரு டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் இந்திய அணி வீழ்ந்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவைகளை பற்றி பார்க்கலாம் : 
1. மழைநேரத்தில் பெங்களூரு மைதானத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பதை அறியாமலும், நியூஸிலாந்து அணியின் இளம் வீரர்களின் வித்தியாசமான பந்துவீச்சை சமாளிக்க வியூகம் அமைக்காமலும் முதல் இன்னிங்சில் அசமந்தமாக விளையாடி 46 ரன்களில் சுருண்டது தான் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.
2. பெங்களூரு மைதானம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமானது என்பது தெரிந்தும் வெறும் 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி ரன் மழை பொழிய வழிவகுத்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டு
களை வீழ்த்தி கைகொடுத்தாலும், ரன்களை வாரி வழங்கி தான் விக்கெட்டுகளை சாய்த்தனர். திடமாக பந்துவீசவில்லை
3. நியூஸிலாந்து அணி வீரர்கள் தங்கள் நாட்டின் சொந்த மைதானத்தை போன்று பெங்களூருவில் அனைத்து வியூகங்களிலும் அமர்க்களமாக செயல்பட்டனர். ஆனால் இந்திய அணியோ பயிற்சியாளர் கம்பீரின் சிறப்பு ஆலோசனை என்ற பெயரில் வெளிநாட்டு மைதானங்களில் விளையாடுவதை போல ஆடி தோல்வியை தழுவியுள்ளது.