பெங்களூரு டெஸ்ட் நியூஸிலாந்து 402 முன்னிலை பெற போராடும் இந்தியா
3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் புத னன்று கர்நாடக தலைநகர் பெங்களூரு வில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, நியூஸிலாந்து அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர்களான ஹென்றி (5 விக்கெட்டுகள்), வில்லியம் (4 விக் கெட்டுகள்) ஆகியோரின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி நிதானமாக ரன் குவித்த நிலையில், வெள்ளியன்று நடைபெற்ற 3ஆம் நாள் ஆட்டத்தின் மதிய நேரத்திற்கு முன்பு 91.3 ஓவர்களில் 402 குவித்து ஆட்ட மிழந்தது. 356 பின்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி பேட்டர்கள் நியூஸிலாந்து வீரர் களின் பந்துவீச்சை கவனமாக கணித்து, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி னர். 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந் திய அணி 49 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து இருந் தது. சப்ராஸ்கான் 70 ரன்களுடன் களத் தில் இருந்தார். நியூஸிலாந்து அணியை விட 125 ரன்கள் பின்னிலையில் உள்ள இந்தியா முன்னிலை பெற கடுமையாக போராடி வருகிறது. சனியன்று தொடர்ந்து 4ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேற்றம் உலகக்கோப்பை கனவை நனவாக்குமா தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி
கிரிக்கெட் உலகின் ஆடவர் பிரிவில் அதிரடிக்கு பெயர் பெற்ற அபாயகரமான அணியாக இருப்பது தென் ஆப்பிரிக்கா மட்டுமே. அந்த அணியுடன் மோது வது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்றெல்லாம் அணிகளை தரம் பிரித்து தென் ஆப்பிரிக்கர்கள் விளையாட மாட்டார்கள் ; எந்த அணியாக இருந்தாலும் அதிரடியுடன் சாய்த்துவிடுவார்கள். இதனால் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுவது என்றாலே ஆடவர் அணிகளுக்கு தயக்கம் அதிகமாக இருக்கும். தென் ஆப்பிரிக்காவிற்கு பல்வேறு சிறப்புகள் இருந்தா லும் அந்த அணி ஒருமுறை கூட இன்னும் உலகக்கோப்பை யை வென்றது இல்லை. மழை மற்றும் கடைசி நேர சொதப்பல் களால் தென் ஆப்பிரிக்கா அணி நிறைய முறை உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. சமீபத்தில் கூட ஆடவர் டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணியிடம் நூலிழையில் கோப்பையை நழுவவிட்டது. இதனால் ஒவ்வொரு முறையும் தங்கள் நாடு உலகக்கோப்பையை வெல்லும் என்ற கனவோடு வரும் அந்நாட்டு ரசிகர்கள் கண்ணீரோடு மைதானத்தில் இருந்து விடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா ரசிகர்களின் கண்ணீரை துடைக்கும் முனைப்பில் ஐக்கிய அரபு அமீர கத்தில் நடைபெற்று வரும் 9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடரில் அந்நாட்டின் மகளிர் அணி மீண்டும் இறு திக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் 6 முறை சாம்பிய னான ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்து இறுதிக்கு முன்னேறியுள்ளது தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி. கடந்த 2023இல் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை டி-20 தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய தென் ஆப்பிரிக்கா நடப்பு சீசனில் பதிலடி கொடுத்துள்ளது. இத்தகைய சூழலில் உலகக்கோப்பை வெல்லாத பலமான நாடு என்ற அவப்பெயரை தகர்க்க கோப்பையை வெல்லும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி தீவிர பயிற்சியுடன் இறுதிப்போட்டிக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.