games

img

விளையாட்டு செய்திகள்

பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தலைமறைவு?

அகார்கர், ஜெய் ஷா மட்டுமே விளக்கம் அளிப்பது ஏன்?

இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பிசி சிஐ) தலைவராக ரோஜர் பின் னியுள்ளார். இவர் 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் விளையாடியவர் என்ற நிலையில், ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக இருந்தாலும்,  செயலாளராக உள்ள அமித் ஷா மகன் ஜெய் ஷா மட்டும் பிசிசிஐ-யை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆதிக் கம் செலுத்தி வருகிறார். ஆனால் தலைவராக இருக்கும் ரோஜர் பின்னி ஒரு பொம்மை போன்று இருப்பது நாடறிந்த விசயம் என்ற நிலையில், டி-20 உலகக் கோப்பை இந்திய அணி அறி விக்கப்பட்ட நாளில் இருந்து ரோஜர் பின்னியை காண வில்லை. டி-20 உலகக்கோப் பைக்கான அணி அறிவிப்பில் பல்வேறு சந்தேகங்களும், கண்டனங்களும், கேள்விக ளும் எழுந்து வரும் சூழலில் இதற்கு விளக்கம் அளிக்கக் கூடியவரான பிசிசிஐ தலைவ ராக ரோஜர் பின்னி தலை மறைவாக உள்ளதும்,  தேர்வு குழுத் தலைவர் அஜித் அகார் கர், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் மட்டுமே விளக் கம் அளிப்பது கடும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு எதுவும் தெரியாது என்றால்  எதற்கு ஜெய் ஷா தேர்வு அறைக்கு செல்கிறார்?

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவிற்கு கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாது. தனது தந்தையின் பெயரை வைத்து பிசிசிஐ- க்குள் ஆதிக்கம் செலுத்தி, பாஜகவின ரின் யுக்தியான கல்லா கட்டும் வேலை யை நன்றாக கவனித்து வருகிறார். கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் குஜராத் வைர வியாபாரிகளை போன்று செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில், டி-20 உலகக் கோப்பை அணியில் இஷான் கிஷான், ஷெரேயாஸ் ஐயரை பொது ஒப்பந்தத்தில் நீக்கியது தொடர்பாகவும், உலகக் கோப்பை தொடரில் இருந்து நீக்கியது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன. ஆனால் இதுகுறித்து ஜெய் ஷா,”எனக்கு ஒன்றும் தெரியாது. இது தேர்வு குழுவின் முடிவு” என செய்தியா ளர்கள் சந்திப்பின் பொழுது நழுவி யுள்ளார். பொது ஒப்பந்தம் தொடர்பான கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் என மூன்று பேர் முக்கிய அங்கமாக இருப் பார்கள். விவாதத்துக்கு பின் இறுதி முடிவும் மேற்குறிப்பிட்ட 3 பேரால் எடுக்கப்படும் என்ற நிலையில், வீரர்கள் நீக்கம் தொ டர்பான சந்தேகத்திற்கு ஜெய் ஷா விளக் கம் அளிக்காமல் நழுவுவது தவறானது ஆகும். தனக்கு எதுவும் தெரியாது என் றால் எதற்கு ஜெய் ஷா தேர்வு அறைக்கு செல்கிறார்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புதுதில்லி

ரிஷப் பண்டிற்கு ஒரு போட்டியில் விளையாட தடை ரூ.30 லட்சம் அபராதம் ; மற்ற வீரர்களுக்கு ரூ.12 லட்சம்

நடப்பு ஐபிஎல் சீசனில் தில்லி அணியின் கேப்டனாக இந்திய அணியின் அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் உள்ளார். 

இந்நிலையில், கடந்த மே 7 அன்று நடைபெற்ற 56ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - தில்லி அணிகள் மோதின. மிகவும் பரபரப் பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தில்லி அணி தாமதமாக பந்து வீசிய நிலையில், இதற்கு நடத்தை விதி நடவடிக்கையாக தில்லி கேப்டன்  ரிஷப் பண்டிற்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப் பட்டுள்ளது. மேலும் ரிஷப் பண்டிற்கு ரூ.30 லட்சம் அபராத மும், மற்ற வீரர்களுக்கு ரூ.12 லட்சம் அபராதமும் விதித்து ஐபிஎல் நிர்வா கம் உத்தரவிட்டுள்ளது. ஒரு போட்டி யில் விளையாட தடை விதிக்கப்பட் டுள்ளதால் ரிஷப் பண்ட் ஞாயிறன்று நடைபெறும் 62ஆவது லீக் ஆட்டத் தில் பெங்களூரு அணிக்கெதிராக விளையாட மாட்டார்.

ஐபிஎல் 2024
இன்றைய ஆட்டங்கள்
சென்னை - ராஜஸ்தான்
(61ஆவது ஆட்டம்) 
நேரம் : மதியம் 3:30 மணி
இடம் : சிதம்பரம் மைதானம், சென்னை, தமிழ்நாடு
பெங்களூரு-டெல்லிராஜஸ்தான்
(62ஆவது ஆட்டம்) 
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : சின்னசாமி மைதானம், பெங்களூரு, கர்நாடகா 
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)