games

img

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து பாபர் அசாம் புதிய சாதனை

பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 4,000 ரன்களை குவித்த 2வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லாகூரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள்  போட்டியில் ஆஸ்திரேலிய அணி  88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அரை சதமடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.  தனது 82வது சர்வதேச ஒருநாள் இன்னிங்ஸில் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை விரைவாக எட்டிய வீரர்களில் ஹாஷிம் ஆம்லாவிற்கு அடுத்து 2 ஆம் இடத்தை பாபர் அசாம் பிடித்துள்ளார்.

ஹாஷிம் ஆம்லா 81 இன்னிங்ஸ்களில் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டினார். 3,000 ரன்களிலிருந்து 4,000 ரன்களை எட்ட 14 இன்னிங்ஸ்கள் மட்டுமே  பாபர் அசாம் எடுத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;