games

img

விளையாட்டு

ஆசியக்கோப்பை கிரிக்கெட் 2023
இன்று ஓய்வு

16-வது சீசன் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், “சூப்பர் 4” சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா - இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி  பெற்றது. விடுமுறை நாளான ஞாயிறன்று இறுதி ஆட்டம் நடைபெறும் நிலையில், “சூப்பர் 4” சுற்றில் விளை யாடிய களைப்பை போக்க சனியன்று ஓய்வு அளிக்கப் பட்டுள்ளது.

நாளை இறுதி ஆட்டம்
இந்தியா - இலங்கை
இடம்:பிரேமதேச மைதானம், கொழும்பு, இலங்கை
நேரம் : மதியம் 3 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார் (ஒடிடி - இலவசம்)
மழை : கண்டிப்பாக பெய்யும். 90% வாய்ப்புள்ளது.

“நெக் குவார்ட்ஸ்” கட்டாயம் 9 ஆண்டுகளுக்கு பின் ஆபத்தின் வீரியம் புரிந்ததா?

விளையாட்டு உலகில் ஆபத்தான விளையாட்டுகளில் கிரிக் கெட்டும் ஒன்று. பேட்டர், பந்துவீசுபவர், கீப்பர், பீல்டிங் செய்பவர், நடுவர், மை தானத்தில் இருக்கும் ரசிகர்கள் கூட பந்து வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. அதுவும் சாதாரண வகையில் அல்ல, உயிருக்கு உலை வைக்கும் தன்மையில் கூட பந்து தாக்கலாம்.  கிரிக்கெட் மைதானத்தில் பந்து  தாக்கி இதுவரை 14 வீரர்கள் உயிரிழந்துள் ளனர். கிரிக்கெட் விளையாட்டில் மீண்டும்  களமிறங்க முடியாமல் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பந்துவீச்சு தாக்குதலில் உயிரிழந்தவர் களில் முக்கியமானவர் ஆஸ்திரேலியா வின் தொடக்க வீரர் பிலிப் ஹுயூக்ஸ்.  கடந்த 2018 நவம்பர் 25 அன்று ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டெஸ்ட் தொடரான செப்பில்டு ஷீல்டு தொடரில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக பேட்டிங் செய்து கொண்டிருந்த பிலிப் ஹுயூக்ஸ், நியூ சவுத் வேல்ஸ் அணியின் சீன் அப்போட் வீசிய பவுன்சர் பந்துவீச்சை ஹூக் ஷாட் செய்ய முயன்றார். ஆனால் ஹுயூக்ஸ் பந்தை திடமாக கணிக்காமல் உடம்பை சுழற்ற, பந்து கழுத்துக்கும் - தலைக்கும் (காது பகுதிக்கு அருகே) கீழ் தாக்கியது. இதில் ஹுயூக்ஸ் படுகாயம் அடைந்தார். மூளைக்கும் - இதயத்திற்கும் ரத்தம் சப்ளை செய்யும் தமனியின் சுவர் முற்றிலும் சிதைந்தது. சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை யில் 2 நாட்கள் கோமாவில் இருந்த பிலிப் ஹுயூக்ஸ் நவம்பர் 27 (2018) உயிரி ழந்தார். பிலிப் ஹுயூக்ஸின் மரணம் கிரிக்கெட் உலகில் கடும் அதிர்ச்சி அலை யை ஏற்படுத்தியது. நெக் குவார்ட்ஸ் அடுத்த சில நாட்களில் பிலிப் ஹுயூக்ஸுக்கு போன்று யாருக்கும் பந்து வீச்சு தாக்குதல் ஏற்படக்கூடாது என நெக் குவார்ட்ஸ் (NECK GUARDS) என்ற அமைப்பை கிரிக்கெட் உலகம் 2015-இல் வடிவமைத்தது. ஆனால் ஒருசில  ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள்  மட்டுமே இதனை அணிந்து விளையாடி னர். இந்திய வீரர்கள் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. காலப்போக்கில் அதாவது 2020-க்கு மேல் ஓரளவுக்கு “நெக் குவார்ட்ஸ்” புழக்கத்திற்கு வந்தது.  ஆனால் எந்த நாட்டு கிரிக்கெட் வாரிய மும் “நெக் குவார்ட்ஸ்” கட்டாயம் என உத்த ரவு பிறப்பிக்கவில்லை. இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் “நெக் குவார்ட்ஸ்” கட்டாயம் என்றும், தவறும்பட்சத்தில் அபராதம் மற்றும் இதர நிர்வாக ரீதியிலான நடவடிக்கையை எதிர் கொள்ளும் என உத்தரவை பிறப் பித்துள்ளது. இது பாராட்டுக்குரியது என்றாலும், 9 ஆண்டுகாலம் மிக வும் தாமதமாக மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கை ஆகும். இனிமேலும் தாமதிக்கா மல் மற்ற நாடுகள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை போன்று கட்டாய அறிவிப்பை வெளியிட வேண்டும்.

பவுன்சர் பந்துவீச்சு தாக்குதல் அபாயம் உள்ள நாடுகள்

கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா, இங்கி லாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய 4 நாடுகளில் உள்ள மைதானங்கள் பவுன்சர் பந்துவீச்சுக்கு சாதக மாக இருக்கும். குறிப்பாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மைதா னங்களில் பந்து எழும்பும் வேகம் மிரட்டலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை அணியில் சீன் அப்போட்

பிலிப் ஹுயூக்ஸ் மரணத்திற்கு காரணமான பவுன்சரை வீசிய சீன் அப்போட் வரவிருக்கும் உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளார். 31 வயதான சீன் அப்போட் பிலிப் ஹுயூக்ஸ் மரணம் அடைந்த பொழுது “குற்ற உணர்ச்சியால்” சில மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் ஒதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.