games

img

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக அஜித் அகர்கர் நியமனம்  

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர்களாக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.  

15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அஜித் அகர்கர் நேற்று நியமிக்கப்பட்டார். 44 வயதான அகர்கர் இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்டுகளில் 58 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 288 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.  இவர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.    

இன்று தொடங்கும் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரில் தனது வர்ணனையாளர் பணி நிறைவடைந்ததும் டெல்லி அணியினருடன் இணைகிறார்.    

இது குறித்து அகர்கர் கூறுகையில் ‘இந்த சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அங்கம் வகிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உலகின் மிகச்சிறந்த திறமையை கொண்ட வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட் தலைமையிலான இளம் அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி’ என தெரிவித்தார்.        

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இதற்கிடையில் டெல்லி அணியின் உதவி பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அஜித் அகர்கர் நேற்று நியமிக்கப்பட்டார்.

அதனைதொடர்ந்து டெல்லி அணியின் மற்றொரு உதவி பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டரான 40 வயதான ஷேன் வாட்சனை நியமிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.