games

img

மகளிர் ஆசியக்கோப்பை கிரிக்கெட்: இறுதியில் இந்தியா-இலங்கை

8வது சீசன் மகளிர் ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர்  வங்கதேச நாட்டில் நடைபெற்று வரு கிறது. தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழ னன்று அரையிறுதி ஆட்டங்கள் நடை பெற்றன.  முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி கத்துக்குட்டி தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி யில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்து அணியை வீழ்த்தி தொடர்ந்து 8-வது முறையாக இறு திக்கு முன்னேறி அசத்தியது.  (ஸ்கோர் : இந்தியா - 148/6 (20), தாய்லாந்து -  74/9 (20)

1 ரன்னில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை

2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 1 ரன்  வித்தி யாசத்தில் வீழ்த்தி சூப்பர் வெற்றியுடன் இறுதிக்கு முன்னேறியுள்ளது இலங்கை அணி. ஆடவர் ஆசியக்கோப்பையிலும் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பதுகுறிப்பிடத்தக்கது. (ஸ்கோர் : இலங்கை - 122/6 (20), பாகிஸ்தான் - 121/6 (20)