ஒன்றரை நாளில் 30 விக்கெட் கடும் சர்ச்சையில் கேப்டவுன் மைதானம் ; குவியும் கண்டனம்
தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டி களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புதனன்று கேப்டவுனில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிங்கிய நிலையில், ஆடுகளத்தின் மாறுபட்ட தன்மையால் இந்திய அணியின் சாதாரண பந்துவீச்சை கூட எதிர்கொள்ள முடியாமல் திணறி யது. பேட்டிங் சுத்தமாக எடுபடாத நிலையில், முகமது சிராஜின் வேகத்தில் (6 விக்.,) வெறும் 55 ரன்களில் தென் ஆப்பிரிக்கா அணி சுக்குநூறாக நொறுங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியும் தென் ஆப்பிரிக்க அணியின் வேகத்தில் திணற, 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரே நாளில் முதல் இன்னிங்ஸ் அடுத்த டுத்து நிறைவு பெற்ற நிலையில், 98 ரன்கள் பின்னிலை யுடன் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் எடுத்து இருந்தது. வியாழனன்று தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது நாள் அட்டத்திலும் பேட்டிங் சரிவர எடுக்காத நிலையில், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸை போல திணறியது. இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணியின் மூத்த வீரர் மார்கிராமின் (106) அசத்தலான அதிரடியால் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 79 ரன்கள் நிர்ணயம் செய்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய அணி வெற்றி 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மைதான நிலைமையை பொருட்படுத்தாமல் அதிரடியுடன் ரன் குவிப்பை தொடங்கி யது. இதன் பலனாக இந்திய அணி 12 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை (80 ரன்கள்) எளிதாக எட்டி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் நிறைவடைந்தது.
வீரர்களின் திறமையை காவு வாங்கிய மைதானம்
கேப்டவுன் மைதானத்தில் இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் வழக்கம் போல தங்களது திறமை யை வெளிப்படுத்தினர். குறிப்பாக இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா 8 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 7 விக்கெட்டுகளையும் (இரண்டு இன்னிங்ஸில்) வீழ்த்தி அசத்தினர். ஆனால் மைதானத்தின் மாறுபட்ட பிட்ச் தன்மையால் இரு அணி வீரர்களும் விக்கெட் மழை பொழிந்த னர் என வீரர்களின் திறமையை மைதானம் காவு வாங்கியுள்ளது.
வலுக்கும் கண்டனம்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வரும் 2-ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் உள்ள நியூ லாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தின் பிட்ச் பகுதிகளில் கூட அடர்த்தியான அளவில் புற்கள் உள்ளன. அதாவது பிட்ச் பகுதியில் தண்ணீர் ஊற்றியது போல புற்கள் மிக மோசமான அளவில் வளர்ந்துள்ளன. இந்த மாதிரியான பிட்ச்களில் வீசப்படும் வேகப்பந்துவீச்சு தாறுமாறாக எகிறும் என்பதால், இந்தியா, தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் சொற்ப ரன்னில் நிலைகுலைந்தனர். முக்கியமாக ஒன்றரை நாளில் 30 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இதுபோன்ற தரமற்ற ஆடுகளங் களுக்கு அனுமதி வழங்கியது ஏன்? என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் உள்ளிட்ட பலரும்கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாட்னா - தில்லி
(56-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி
மும்பை - பெங்களூரு
(57-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை, சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்)