காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெறுகிறது. இந்திய அணியின் சார்பில் இந்த தொடரில் பங்கேற்பதற்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு ஒடிசா மாநிலம் கட்டாக்கில் 2 நாட்கள் நடை பெற்றது. கேடட் (17 வயதிற்குட்பட் டோர்) பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீராங்கனைகள் காமன்வெல்த் வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு பெற்று உள்ளனர். ஜாய்ஸ் அஷிதா (சென்னை), ஜெனிஷா (கன்னியாகுமரி), ஆகியோர் பாயில் பிரிவிலும், ஜெபர்லின் (கன்னியா குமரி) சபரே பிரிவிலும் தேர்வாகி யுள்ளனர். இந்த 3 பேரும் காமன் வெல்த் போட்டியில் தமிழ்நாடு வாள்வீச்சு சங்க ஆதரவுடன் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறார்கள்.
டிஎன்பிஎல்
இன்றைய ஆட்டம்
மதுரை - திண்டுக்கல்
நேரம்: இரவு 7:15 மணி
இடம் : என்.பி.ஆர் மைதானம், திண்டுக்கல் (நத்தம்)