வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள இந்திய அணி தற் போது டெஸ்ட் தொடரில் விளை யாடி வருகிறது. 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2-வது ஆட்டம் டாக்காவில் வியாழ னன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன் களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ரிஷப் பண்ட் (93), ஷெராயஸ் (87) ஆகி யோரின் அபார ஆட்டத்தால் 314 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 87 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய வங்க தேச அணி இந்திய அணியின் வேகம், சுழல் கலந்த தாக்கு தலை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே திணறியது. 3-ஆம் நாளின், 3-வது சீசனில் வங்கதேச அணி தனது 2-வது இன்னிங்ஸில் 231 ஆட்டமிழந்து, இந்திய அணிக்கு வெற்றி இலக் காக 145 ரன்கள் நிர்ணயித்தது. 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் கள மிறங்கிய இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந் திய அணி 23 ஓவர்களில் 4 விக் கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத் துள்ளது. இன்னும் 2 நாள், 6 விக்கெட்டு கள் கையிருப்பு, 100 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி வெற்றிக்காக போராடி வரு கிறது. 6 விக்கெட்டுகளை விரை வில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ய வங்கதேச அணியும் இறுதிக் கட்ட போராட்டத்தில் இறங்கி யுள்ள நிலையில், டாக்கா டெஸ்ட் மிக பரபரப்பாக நகர்ந்து வரு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.