14 வயது ; 35 பந்துகளில் 100 ரன்கள்; ஒரே நாளில் பல்வேறு சாதனைகள் கிரிக்கெட் உலகை மிரள வைத்த இளங்கன்று சூர்யவன்ஷி
18ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், திங்க ளன்று நடைபெற்ற 47ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. 120 பந்துகளுக்கு 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி மிக இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் (38 பந்துகளில் 101 ரன்கள்) அபார சதம் மற்றும் ஜெய்ஸ்வாலின் (40 பந்துகளில் 70 ரன்கள்) நிதான அதிரடி ஆட்டத்தின் உதவியால் 8 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றியை ருசித்தது. சூர்யவன்ஷியும்... சாதனைகளும்... 9 ஆம் வகுப்பு படிக்கும் வைபவ் சூர்யவன்ஷி குஜராத் அணிக்கெதிராக ஒரே நாளில், வெறும் 14 வயதில் பல்வேறு அசத்தல் சாதனைகளை படைத்துள்ளார். கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ளார். 1.டி-20 வரலாற்றிலேயே மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சூர்யவன்ஷி (14 வயது 32 நாட்கள்). இது சர்வ தேச அளவில் நிகழ்த்தப்பட்ட சாதனை ஆகும். இதற்குமுன் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஜய் சோல் என்பவர் 18 வயது 118 நாட்களில் டி-20 போட்டியில் சதம் அடித்திருந்தார். அவரது சாத னையை 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி தற்போது முறியடித்துள்ளார். 2. ஐபிஎல் தொடரில் குறைந்த இன்னிங்ஸ்களில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் (3ஆவது இன்னிங்ஸில்) என்ற பெருமையைப் பெற்றார். 3. ஆடவர் டி-20 இன்னிங்ஸில் 18 வயதுக்கு கீழே இருக்கும் ஒரு வீரர் பத்து சிக்ஸர்களுக்கு (11 சிக்ஸர்) மேல் அடித்த சாதனையை முதன்முறையாக வைபவ் சூர்யவன்ஷி செய்திருக்கிறார். 4. ஐபிஎல் வரலாற்றில் சதமடித்த இன்னிங்ஸ்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சூர்யவன்ஷி (265.78) படைத்துள்ளார். இதற்கு முன் யூசுப் பதான் (37 பந்துகளில் சதம் - 270.07) மற்றும் டேவிட் மில்லர் (38 பந்துகளில் சதம் - 265.78) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். 5. ஒரு ஐபிஎல் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசிய 4ஆவது வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி (11) பெற்றுள்ளார். கிறிஸ் கெயில் (பெங்களூரு), புனே அணிக்கு எதிரான போட்டியில் 2013ஆம் ஆண்டு ஒரே இன்னிங்ஸில் 17 சிக்ஸர்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.