இறுதிக்கு முன்னேறுவது யார்?
ஸ்பெயின் - சுவீடன் இன்று மோதல்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வரும் 9-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாயன்று அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. செவ்வாயன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சுவீடன் அணி, ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.
ஸ்பெயின் - சுவீடன்
வெற்றி வாய்ப்பு
நேரம் : மதியம் 1:30 மணி
இடம் : ஈடன் பார்க், ஆக்லாந்து, நியூசிலாந்து
சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், பேன் கோடு (ஒடிடி)
யாருக்கு வெற்றி?
தடுப்பாட்டத்தில் சுவீடன் அணியும், முன்களத்தில் ஸ்பெயின் அணியும் பலமாக உள்ளன. சுவீடன் வீராங்கனைகள் கோலடிக்க மாட்டார்கள், கோல் போடவும் விட மாட்டார்கள். பெனால்டி சூட் அவுட்டில் பார்த்துக்கொள்ள லாம் என்ற எண்ணத்தில் ஆட்டத்தை சவ்வாக இழுத்து வெற்றி பெறும் ஆட்டமுறையை கொண்டவர்கள். ஆனால் ஸ்பெயின் வீராங்கனைகள் அப்படி அல்ல. கோல் அடித்து தடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் அதிரடி மனநிலையுடன் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய நினைப்பவர்கள். இரு அணிகளின் ஆட்ட முறையை உற்றுநோக்கினால் ஸ்பெயின் அணி சற்று பலமான ஆட்டமுறையை கொண்டது என்பதால் ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு முன்னேற சகல வாய்ப்புகளும் உள்ளன. அதே போல நடப்பு சீசனில் மிக பிரம்மாண்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுவீடன் அணியும் அரையிறுதியில் காலடி வைக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இதனால் யாருக்கு அரையிறுதி வாய்ப்பு என திடமாக கருத்து கூற முடியாது.
ஆஸ்திரேலிய மைதானங்கள் சூப்பர்
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து ஆஸ்திரே லியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து நாட்டில் உள்ள மைதானங்களை விட ஆஸ்திரேலியா மைதானங்கள் நன்றாக நிலையில் இருந்தன. புற்கள் அதிகமாக இருந்ததால் வழுக்கவும் இல்லை. வீராங்கனைகள் இயல்பாக ஓடினர். காயங்கள் அவ்வளவாக ஏற்படவில்லை. ஆனால் நியூசிலாந்து மைதானங்கள் சற்று மாறுபட்ட நிலையில் இருந்தன. பந்தை கடத்தி செல்ல சாதகமாக இல்லை. காரணம் நியூசிலாந்து மைதானங்கள் கால்பந்திற்காக உருவாக்கப்பட்ட மைதானங்கள் இல்லை., ரக்பி மைதானங்கள் ஆகும். இதனால் தரத்தில் சற்று மாறுபட்டதாகவே இருந்தன. கடந்த 2022இல் காத்தார் நாட்டில் நடைபெற்ற ஆடவர் உலகக்கோப்பை கால்பந்தில் மைதானங்கள் மிக மோசமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
உயரமே பிளஸ்..
சுவீடன் வீராங் கனைகள் அனைவரும் சராசரி யாக 5’0 முதல் 6’0 அடிக்கு மிகாமல் உள்ளனர். இதுதான் இவர்களுக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டை தருகிறது. காரணம் தடுப்பாட்டத்தின் பொழுது பந்து எவ்வளவு உயரத்தில் வந்தாலும் எளிதாக தடுக்கின்ற னர். மேலும் பந்தை உயரமாக மேலே கொண்டு ஹெட் ஷாட்களுடன்பந்தை கடத்துகின்றனர். மற்ற நாட்டு வீராங்கனைகள் உயரம் குறைவாக இருப்பதால் சுவீ டன் வீராங்கனைகளிடம் பந்தை தட்டி பறிக்க போராடு கின்றனர். உயரம் அதிகமாக இருந்தால் வேகமாக ஓட முடியாது என்றாலும், சுவீடன் வீராங்கனைகள் சிறப்பு பயிற்சி மூலம் பறக்கின்றனர். சுவீடனின் சிறப்பான கால்பந்து எழுச்சிக்கு உயரமும் ஒரு காரணம்.
மீண்டும் வரலாற்றுப் பாதையில் மேற்கு இந்தியத் தீவுகள்
உள்ளூர் டி-20 போட்டிகளின் ஆதிக்கத்தாலும், போதுமான அளவில் நட்சத்திர வீரர்கள் இல்லாததாலும் சின்னா பின்னமாகி 2 முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இந்தியாவில் நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியாமல் சோகத்தில் மூழ்கியது. இதனால் மேற்கு இந்தி யத் தீவுகள் அணிகளின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு தான் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், இந்தியா விற்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளை கொண்ட தொட ரில் ராணுவத்திற்கு நிகரான பயிற்சி யுடன் களமிறங்கிய மேற்கு இந்தி யத் தீவுகள் அணி டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை இழந்தாலும் ஆட்டத்திற னில் ஓரளவு முன்னேற்றம் கண்டது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் டி-20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படு த்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3-2 என்ற கணக்கில் டி-20 தொடரை கைப் பற்றி பட்டையை கிளப்பியது. இந்த வெற்றியை இந்தியா மட்டுமல்ல கிரிக் கெட் உலகமே எதிர்பார்க்கவில்லை. அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி அசத்தியது. இந்த குறுகிய கால எழுச்சி மீண்டும் வரலாற்றுப் பாதையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.