games

img

கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் கோவாவில் ரொனால்டோவிற்கு சிலை          

உள்ளூர் அளவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாகக் கோவாவில் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.  முன்னணி கால்பந்து வீரராக உள்ள இவருக்கு உலகம் முழுவதும் அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கால்பந்து விளையாட்டிற்குப் பிரபலமான கோவாவில் ரொனால்டோவிற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

கோவா பானாஜியில் அமைக்கப்பட்டுள்ள இவரது முழு உருவச் சிலையைப் புதன்கிழமை திறந்து வைத்துப் பேசிய அமைச்சர் மைக்கேல் லோபோ, உள்ளூர் அளவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்த சிலை கால்பந்து வீரர்களுக்கு உற்சாகத்தைத் தரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

;