இன்று ஆட்டங்கள் கிடையாது. நாளை 3-வது இடத்திற்கான ஆட்டம் நடைபெறுகிறது. சனியன்று 3-வது இடத்திற்கான ஆட்டமும், விடுமுறை நாளான ஞாயிறன்று இறுதி ஆட்டமும் நடைபெறுகிறது.
திணறும் பெண் நடுவர்கள்
மகளிர் உலகக்கோப்பையில் பெண் நடுவர்கள் மட்டுமே களமிறக்கப்பட்டுள்ளனர். ஆண் நடுவர் கள் களத்தில் இல்லை என்றாலும் இதர பணிகளுக்கு பெவிலியன் பகுதியில் பணியாற்றி வருகின்றனர். முன்பை விட பெண் நடு வர்களின் செயல்பாடு தற்பொழுது முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், வேகமாக ஓட முடியாத காரணத்தினால் கள முடிவு கள் கவனக்குறைவாக அரங்கேறுகின்றன. பவுல் விஷயத்தில் அடிக்கடி சொதப்பல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஏற்படும் சொதப்பல்களால் கிரிக்கெட் போல அடிக்கடி டிவி ரிப்ளே அதிகமாக பார்க்கப்படுவதால் நேர விரயம் ஆகிறது. மேலும் சில “ஹேண்ட் ஷாட்” எனப்படும் கையில் தொடும் பந்து படும் பவுல்களை பெண் நடுவர்கள் கண்டுகொள்வதில்லை. வீராங்கனைகள் மேல்முறையீடு செய்தால் உடனடியாக அதை ஏற்பதில்லை. இதனால் நடுவர்களை வீராங்கனைகள் சரிவர மதிப்பதில்லை. நடுவர்களின் வாய்மொழி உத்தரவை வாய்ச்சொல்லை கண்டுகொள்ளாமல் செல்கின்றனர். விசில் அடித்தாலும் 5 நொடிக்கு அப்புறம்தான் ஆட்டத்தை நிறுத்து கின்றனர். ஆனால் இதில் ஒரு நல்ல விசயம் என்னவென்றால் நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒருமுறை கூட வீராங்கனைகளுக்கும், நடுவர்களுக்கும் சண்டை அரங்கேறியதில்லை என்பதுதான்.
3-வது இடத்திற்கான ஆட்டம்
சுவீடன் - ஆஸ்திரேலியா
நாள் : ஆகஸ்ட் 19 (சனி), மதியம் 1:30 மணி
இடம் : சன்கார்ப் மைதானம், பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா
இறுதி ஆட்டம்
ஸ்பெயின் - இங்கிலாந்து
நாள் : ஆகஸ்ட் 20 (ஞாயிறு), மதியம் 3:30 மணி
இடம் : ஸ்டேடியம் ஆஸ்திரேலியா, சிட்னி
புதிய வரலாறை நோக்கி நகரும் சின்சினாட்டி ஓபன்
அமெரிக்காவின் முன்னணி டென் னிஸ் தொடரான சின்சினாட்டி டென் னிஸ் தொடரின் 122-வது சீசனில் ரவுண்ட் சுற்று கள் நடைபெற்று வருகிறது. டென்னிஸ் வர லாற்றிலேயே முற்றிலும் மாறுபட்ட கண்ணோ ட்டத்துடன் சின்சினாட்டி ஓபன் நகர்ந்து வரு கிறது. காரணம் அனுபவம் வாய்ந்த முன்னணி வீரர், வீராங் கனைகள் தரவரிசையில் இல்லாத இளம் வீரர், வீராங்கனை களிடம் வீழ்ந்துள்ளனர். அதுவும் போராட்டம் இல்லாமல் நேர் செட்களில் வெளியேறியுள்ளனர். முதல் சுற்றில் பல அதிர்ச்சி தோல்விகள் அரங்கேறிய நிலையில், வியாழ னன்று நடைபெற்ற ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்திலும் அதிர்ச்சி தோல்விகள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு
உலக தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள குரோஷியா வின் நோரிச், தரவரிசையில் இல்லாத போலந்தின் ஹுபர்ட்டி டம் 7-5, 3-6, 3-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து வெளியேறி னார். மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபோ, தரவரிசையில் இல்லாமல் களமிறங்கிய முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவிடம் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். நார்வேயின் ரூனே காயம் காரணமாக வெளியேற, செர்பியாவின் நோவக் ஜோகோ விச், பிரான்சின் மோன்பிள்ஸ், கிரீஸின் சிட்சிபாஸ் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். மகளிர் ஒற்றையர் பிரிவு மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கவுப், பெலாரசின் சபலன்கா, கஜகஸ்தானின் ரைபகினா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறிய நிலையில், பெல்ஜியத்தின் மெர்டன்ஸ், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், பெலாரசின் அசரென்கா ஆகியோர் அதிர்ச்சி தோல்விகளுடன் வெளியேறியுள்ளனர். சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் ரவுண்ட் ஆப் சுற்றில் முன்னணி நட் சத்திரங்கள் வெளியேறியது போல வேறு எந்த தொடர்களி லும் இவ்வாறு வெளியேறியது கிடையாது. இதனால் முன்னணி நட்சத்திரங்கள் வெளியேறுதல் தொடர்பாக புதிய வரலாறை நோக்கி சின்சினாட்டி டென்னிஸ் நகர்ந்து வருகிறது.