பிரபல இளம் மல்யுத்த வீரர் பிரே வியாட் காலமானார்
அமெரிக்காவில் டபிள்யு டபிள்யுஇ (WWE) என அழைக்கப்படும் பொழுது போக்கு மல்யுத்த விளையாட்டு பிரபலமானது. சினிமா போன்று முன்கூட்டியே திட்டமிட்டு சண்டை காட்சிகள் நாடகம் போன்று நடத்தப்படுவதாலும், அடிதடி, காயம் என அனைத்தும் சுவாரஸ்யமாக, உண்மையாக அரங்கேறும் என்பதால் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் டபிள்யுடபிள்யுஇ தொட ருக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில், இந்த டபிள்யுடபிள்யுஇ தொட ரின் முன்னணி சாம்பியன் ஸ்டாராக இரு க்கும் பிரே வியாட் (உண்மையான பெயர் - வின்டாம் ரோட்டுண்டா) வியாழனன்று திடீ ரென மாரடைப்பு காரணமாக அமெரிக்கா வின் புளோரிடாவில் காலமானார். வெறும் 36 வயதாகும் வியாட் மூன்று முறை டபிள்யுடபிள்யுஇ உலக சாம்பியன், ஒரு முறை டபிள்யுடபிள்யுஇ சாம்பியன்ஷிப், இரண்டு முறை டபிள்யுடபிள்யுஇ யுனி வர்சல் சாம்பியன்ஷிப் பட்டம்வென்றவர். வியாட் தந்தை வைட் மைக் ரோட்டுண்டா வும் டபிள்யுடபிள்யுஇ மல்யுத்தத்தில் விளையாடியவர். மேலும் வியாட்டின் சித்தப்பா, மாமா ஆகியோரும் டபிள்யுடபிள்யுஇ மல்யுத்தத்தில் விளையாடியுள்ளனர். வியாட் குடும்பமே விளையாட்டு உலகில் கொடி கட்டி பறக்கும் குடும்பம் ஆகும். 65 வயதில் வியாட்டின் தந்தை இன்னும் கம்பீரமாக உயிரோடு உள்ள நிலையில், 36 வயதில் வியாட் திடீரென உயிரிழந்துள்ளது டபிள்யு டபிள்யுஇ உலகில் மட்டுமின்றி விளை யாட்டு உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
என்ன காரணம்?
பிரே வியாட் ஜிம் ஒர்க் அவுட் கட்டுமான உடம்பு இல்லாத நபர். அதாவது கட்டிங் பாடி பிட்டிங் இல்லாத உடல்பருமன் (129 கிலோ) உடையவர். உடல்பருமனாக இருந்தாலும் வேகமாக ஓடக்கூடியவர். நல்ல சுறுசுறுப்பாக சண்டை செய்பவரும் கூட. ஆனால் கொரோனா சீசனில் நோய் தொற்று தீவிர சிகிச்சையுடன் நோய் பாதிப்பிலிருந்து மீண்டார். கொரோனா தாக்குதல் வீரியம் அவரது உடலில் இயல்புநிலையை காவு வாங்கியுள்ளது. அதாவது முன்பு போல மல்யுத்தத்தில் விளையாட முடியாமல் திணறினார். கடந்த பிப்ரவரி மாதம் சொல்லப்படாத காயம் காரணமாக ஓய்வில் இருந்த வியாட் கொரோனா வைரஸின் விளைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
டென்னிஸ் உலகின் “போராட்ட மன்னர்” ஜான் இஸ்னர் ஓய்வு அறிவித்தார்
டென்னிஸ் உலகின் போராட்ட குணமிக்க வீரரான அமெரி க்காவின் ஜான் இஸ்னர் யுஎஸ் ஓபன் 2023 தொடருக்கு பின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக பார்ம் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ஜான் இஸ்னர் முன்னணி டென்னிஸ் தொடர்களில் அடுத்தடுத்து நாக் அவுட் ஆனார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலி றுதியை தாண்டவே திணறினார். இதன் காரணமாகவே அவர் ஓய்வு அறிவித்துள் ளார். நடப்பாண்டிற்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 28 அன்று தொடங்கி செப்டம்பர் மாதம் 10 வரை நடை பெற உள்ளது.
முறியடிக்க முடியாத சாதனைக்கு சொந்தக்காரர்
டென்னிஸ் உலகில் நீண்ட நேரம் நடைபெற்ற போட்டியில் வெற்றி கண்டவர் என்ற சிறப்பு சாதனைக்கு சொந்தக்காரர் ஜான் இஸ்னர் ஆவார். 2010 விம்பிள்டன் தொடரில் முதல் சுற்று ஆட்டத்தில் ஜான் இஸ்னர் பிரான்சின் நிக்கோலஸை 6-4, 3-6, 7-6, 6-7, 3-2, 70-68 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இந்த ஆட்டம் 11 மணிநேரம் 5 நிமிடம் நடைபெற்ற நிலையில், 13 வருடம் ஆகியும் இந்த சாதனையை யாரும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.