எல்லாம் வானத்தின் கையில்
கிரிக்கெட் உலகம் அதிகம் எதிர்நோக்கும் டி-20 உலகக்கோப்பை தொடரின் 8-வது சீசன் விடுமுறை நாளான ஞாயிறன்று தொடங்குகிறது. முதல் 6 நாட்கள் அதாவது 21-ஆம் தேதி வரை தகுதி சுற்று ஆட்டங்களும், 22-ஆம் தேதி முதல் “சூப்பர் 12” சுற்று ஆட்டங்களும் தொடங்குகிறது. கடந்த காலங்களை விட நடப்பு சீசன் டி-20 உலகக் கோப்பை தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அந்த எதிர்பார்ப்பை மழை சுக்குநூறாக நொறுக்க உள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகத்தில் எப்படி, எப்பொ ழுது எங்கு மழை பெய்யும், எப்பொழுது மழை நிற்கும் என திடமாக கணிக்க முடியவில்லை. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 2 மாதமாக வெள்ளத்தில் மிதக்கிறது. பாகிஸ்தான் நிலை ஆஸ்திரேலியாவுக்கு இல்லை என்றாலும், உலகக்கோப்பை தொடங்க இன்னும் 1 நாட்கள் இடைவெளி உள்ள நிலையில், நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, டாஸ்மானியா, மெல்போர்ன் ஆகிய மாநிலங்களில் மழை புரட்டியெடுத்து வருகிறது.
ஏற்கெனவே வெள்ளத்தில் மிதக்கும் தென் கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக மழை மிரட்டி வருவதால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஆஸ்திரேலிய அரசு உத்தர விட்டுள்ளது. உலகக்கோப்பை தொடரை ஆவலுடன் உற்று நோக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி விஷயம் என்னவென்றால் உலகக்கோப்பை போட்டி நடைபெறும் 7 மைதானங்களில் 6 மைதானம் வெள்ளத்தில் மிதக்கும் தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ளது என்பதுதான். பெர்த் (மைதானம்) நகரம் தென் மேற்கு பகுதியில் உள்ளது. அங்கு தீவிர கனமழைக்கான சூழலும் இல்லை. மேலும் பெர்த்தில் குறைந்த அளவு ஆட்டங்கள் தான் நடை பெறுகிறது. தகுதிச் சுற்று ஆட்டங்கள் முதல் இறுதி வரை பெரும்பாலான மைதானங்கள் தென் கிழக்கு வட்ட பகுதியில் இருப்பது தான் கிரிக்கெட் உலகத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மழை சீசன் எப்பொழுது நிறை வடையும் என ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் திட மாக எதுவும் கூறவில்லை என்பது கூடுதல் அதிர்ச்சி விஷய மாகும். வீரர்கள் விடுவார்களா? இல்லை மழை விளையாடுமா? என காலநிலை மாற்றமும், வானிலையும் தான் 8-வது சீசன் உலகக்கோப்பையை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளன. புரியும் படி சொன்னால் ஆஸ்திரேலிய உலகக் கோப்பை வானத்தின் கையில் தான். இதனால் வீரர்களின் பார்ம், அணியின் பலம் இதனோடு மழை விவகாரத்தையும் கூடுதலாக அதாவது முதன்மையாக ஆராயும் நிலைக்கு கிரிக்கெட் உலகம் மாறிவிட்டது. இந்த மாற்றத்திற்கு கால நிலை மாற்றம் முக்கிய பங்காற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து
7-வது ஜூனியர் (17) மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய 3 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
சீனா - கொலம்பியா
நேரம் : மாலை 4:30
ஸ்பெயின் - மெக்ஸிகோ
நேரம் : இரவு 8 மணி
இரண்டு ஆட்டங்களும் : நவிமும்பையில் (மகாராஷ்டிரா)
பிரான்ஸ் - தான்சானியா
நேரம் : மாலை 4:30
ஜப்பான் - கனடா
நேரம் : இரவு 8 மணி
இரண்டு ஆட்டங்களும் - மார்க்கோவா (கோவா)
இன்றைய ஆட்டங்கள்
புரோ கபடி லீக்
ஜெய்ப்பூர் - குஜராத்
நேரம் : இரவு 7:30 மணி
தெலுங்கு டைட்டன்ஸ் - தில்லி
நேரம் : இரவு 8:30 மணி
பெங்கால் - பாட்னா
நேரம் : இரவு 9:30
இடம் : மூன்று ஆட்டங்களும் - கன்டிவாரா மைதானம் (பெங்களுரூ)
ஆசியக் கோப்பை - மகளிர்
இறுதி ஆட்டம்
இந்தியா - இலங்கை
நேரம்: மதியம் 1:00 மணி/இடம்: சைல்ஹெட் (வங்கதேசம்)