games

img

விளையாட்டு...

உலகக்கோப்பை கிரிக்கெட் டிக்கெட் விற்பனை சாமானியர்களுக்கு டிக்கெட் கிடைப்பது சந்தேகம்

12 வருடத்திற்கு பிறகு இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகிறது. இந்த 13-வது சீசன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 தேதியன்று தொடங்கும் நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை புக் மை ஷோ (BookMyShow) இணையதளத்தில் தொடங்கியுள்ளது. ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 15 வரை மட்டுமே டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக ஆன்லைன் விற்பனை பற்றியே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  சாமானியர்கள் வாங்கும்படி கவுண்டர் விற்பனை அறிவிப்பு தொடர்பாக எந்த வெளிப்படையான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனை உற்றுநோக்கினால் நடப்பு சீசன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாமானியர்களுக்கு டிக்கெட் கிடைப்பது சந்தேகம்தான் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்கெட் விற்பனை திட்டங்கள்

ஆகஸ்ட் 29 - மாலை 6 மணி முதல் : இந்திய அணியின் போட்டிகள் ஆகஸ்ட் 25 - இரவு 8 மணி முதல் : இந்தியா அல்லாத பயிற்சி போட்டிகள், இந்தியா அல்லாத மற்ற அணிகளின் போட்டிகள் ஆகஸ்ட் 30 - இரவு 8 மணி முதல் : கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தியா அணிக்கான போட்டிகள் ஆகஸ்ட் 31 இரவு 8 மணி முதல் :  சென்னை, தில்லி, புனேவில் நடைபெறும் இந்தியா அணிக்கான போட்டிகள் செப்டம்பர் 1 - இரவு 8 மணி முதல் : தர்மசாலா, லக்னோ, மும்பையில் நடைபெறும் இந்தியா அணிக்கான போட்டிகள் செப்டம்பர் 2 - இரவு 8 மணி முதல் : பெங்களூரு, கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா அணிக்கான போட்டிகள் செப்டம்பர் 3 - இரவு 8 மணி முதல் : அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா அணிக்கான போட்டிகள் செப்டம்பர் 15 - இரவு 8 மணி முதல் : அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்

புக் மை ஷோ முடங்கியது

சினிமா உள்ளிட்ட நாட்டின் முதன்மையான பொழுது போக்கு இடங்களை காண டிக்கெட் விற்பனை செய்யும் புக் மை  ஷோ (www.bookmyshow.com) என்ற இணையதளத்தில் உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட் பெற்றுக்கொள்ள லாம். உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் டிக்கெட் வாங்க ரசிகர்கள் ஆன்லைனில் முயற்சித்ததால் 40 நிமிடங்கள் புக் மை ஷோ இணையதளம் முடங்கியது. இதனால் டிக்கெட் வாங்க ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

தமிழ்நாட்டில்....

உலகக்கோப்பை தொடரில் தமிழ்நாட்டில் 5 ஆட்டங்கள் (சென்னை - சேப்பாக்கம்) நடைபெறுகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டம் : ஆஸ்திரேலியா (அக்., 8)
நியூசிலாந்து - வங்கதேசம் (அக்.,13)
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் (அக்., 18)
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் (அக்., 23)
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா (அக்., 27)
இந்த 5 ஆட்டத்தில் இந்திய அணி விளையாடும் ஆட்டம் மட்டும்
ஆகஸ்ட் 31 இரவு 8 மணி முதல் டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. மற்ற
4  ஆட்டங்களின் டிக்கெட் விற்பனை ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியக்கோப்பை சிக்கல் இல்லாமல் நடைபெறுமா?

16-வது சீசன் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை மண்ணில் வருகின்ற ஆகஸ்ட் 30 அன்று தொடங்குகிறது. ஆசியக்கோப்பை தொடர் நடைபெறும் இலங்கையில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. அங்கு தினசரி பாதிப்பு மிதமான அளவில் ஏறுவரிசையில் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தால் ஆசியக் கோப்பை போட்டி தள்ளிபோகும் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். 2 இலங்கை வீரர்களுக்கு கொரோனா இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் விக்கெட் கீப்பர் குசலா பெரேரா ஆகியோ ருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே ஆசியக்கோப்பைக்கான இலங்கை அணி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.