games

img

எதிரணி வீரர்களை உதைப்பதில் குறியாக இருக்கும் புனே அணி வீரர்கள்

நடப்பு சீசன் கபடி தொடரில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரு அணிகள் மட்டுமே சற்று வித்தியாசமாக விளையாடி வருகிறது.  ஒன்று தமிழ்நாடு (தமிழ் தலைவாஸ்) மற்றொன்று புனே (புனேரி பால்டான்). தமிழ்நாடு அணி தான் வெற்றி பெறவில்லை என்றாலும் எதிரணி வெற்றி பெறக்கூடாது என்ற எண்ணத்தில் டிரா செய்து எதிரணிகளை மிரட்டி வருகிறது.  தமிழ்நாடு இப்படியென்றால் புனே அதற்கு மேலாக ஒரு செயலை செய்து வருகிறது. அதாவது புனே ரைடர்கள் கையை வைத்து எதிரணி வீரர்களை தொட்டு புள்ளிகளை குவிப்பதில்லை. காலால் ஆக்ரோஷமாக உதைத்து புள்ளிகளை பெறுவதிலேயே குறியாக உள்ளார்கள். இதற்கு காரணம் அந்த அணியின் பயிற்சியாளர் தான். முன்பு மும்பை அணிக்காக விளையாடிய அனுப் குமார் இதே ஸ்டைலில் விளையாடுபவர். அவர் கொடுக்கும் பயிற்சியில் தான் புனே வீரர்களும் உதைத்து வருகின்றனர். காலால் அடிக்கடி உதைத்தால் எதிரணி வீரர்கள் அதை எளிதாக பிடித்து விடுவார்கள் என்பதை உணராமல் விளையாடி வரும் புனே அணி வெற்றியை சரியாக கணிக்க முடியாமல் கடைசி இடத்தில் உள்ளது. 

இன்றைய ஆட்டங்கள் 

புனே-குஜராத் (இரவு 7:30)
தில்லி-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8:30)