புரோ கபடி 2023 - முதல் வெற்றியை ருசிக்குமா பவனின் தெலுங்கு டைட்டன்ஸ்?
10-ஆவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தற்பொழுது 3- ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெற்று வரும் நிலையில், சனியன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் இரண்டாம் ஆட்டத்தில் கபடி உலகின் நட்சத்திர வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான பவன் செரா வத் விளையாடி வரும் தெலுங்கு டைட்ட ன்ஸ் அணியும், மற்றொரு நட்சத்திர வீரர் நவீனின் தபாங் தில்லி அணியும் மோதுகின்றன. திணறும் தெலுங்கு டைட்டன்ஸ் கடந்த 6-ஆவது சீசனில் (2018-2019) பெங்களூரு அணிக்கு கோப் பையை பெற்றுக்கொடுத்த பவன் செரா வத் கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடி காயத்துடன் ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே விளை யாடி ஓய்வில் வெளியேறினார். இந்நிலையில், நடப்பு சீசனில் கோப்பை கனவுடன் தெலுங்கு டைட்ட ன்ஸ் அணி நிர்வாகம் பவன் செரா வத்தை ரூ.2 கோடிக்கு வாங்கியது. ஆனால் போதுமான அளவு நட்சத்திர வீரர்கள் இல்லாததாலும், காயத்தில் இருந்து மீண்ட பவன் செராவத் முன்பு போல ரெய்டு செல்ல முடியாமல் திணறி வருவதால், தெலுங்கு டைட்டன்ஸ் நடப்பு சீசனில் முதல் வெற்றியை ருசிக்க முடியாமல் 4 ஆட்டங்களில் விளையாடி 4 ஆட்டத்திலும் தோல்வி யை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தனது 5-ஆவது லீக் ஆட்டத்தில் தில்லி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசிக்குமா? என்ற எதிர்பார்ப்பில் பவனின் தெலுங்கு டைட்டன்ஸ் ரசிகர்கள் உள்ளனர்.
புனேரி பால்டன் - பெங்கால் வாரியர்ஸ்
(25-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி
தெலுங்கு டைட்டன்ஸ் - தபாங் தில்லி
(26-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி
தோனி தொடர்ந்த சூதாட்ட அவதூறு வழக்கு
ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை
ஐபிஎல் தொடரின் 2013-ஆம் ஆண்டு சீசனில் சூதாட்ட விவகாரம் தொடர்பாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டு (2016, 2017) விளையாட தடை விதிக்கப்பட்டன. இந்த சூதாட்ட விவகாரம் தொடர்பாக 2014இல் விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தனது அறிக்கை யில்,”இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டார்” என குறிப்பிட்டு இருந்தார். சம்பத் குமாரின் குற்றச்சாட்டால் தனியார் தொலைக்காட்சியில் விவாதம் கூட நடைபெற்றது. இந்நிலையில், சூதாட்டம் தொடர்பாக தனது பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக கூறி ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு தனியார் தொலைக்காட்சி நிர்வாகம், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோருக்கு எதிராக 2014-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தோனி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சம்பத் குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தோனி தொடர்ந்த வழக்குத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளியன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்தும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்க ளுக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திடீரென பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிய “பெர்த் மைதானம்”
ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்பொழுது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 487 ரன்கள் குவித்தது. சொந்த மண் என்பதால் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் ஆஸ்தி ரேலிய அணி அதிரடியாக ரன் குவித்து இருக்கலாம் என பேசப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணியைப் போலவே பாகிஸ்தான் அணியும் பந்துவீச்சில் திணறாமல் நிதான வேகத்தில் ரன் குவிப்பை தீவிரப்படுத்தி யது. பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஓவர்ளில் விக்கெட்டுகளை இழந்து ரன்கள் குவித்து இருந்தது. உலகின் அதி வேக ஆடுகளமான பெர்த் மைதானத்தின் பிட்ச் திடீரென மாறியுள்ளது பலத்த சந்தே கங்களை கிளப்பியுள்ளது. காலநிலை மாற்றமா? இல்லை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பிட்ச் அமைப்பில் மாற்றம் ஏதும் செய்ததா? எனத்தெரியவில்லை.