games

img

விளையாட்டு - புரோ கபடி 2023

புரோ கபடி 2023

10-ஆவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தற்பொழுது 4-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்று வருகிறது. சனியன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், முதல் ஆட்டத்தில்  தமிழ்நாடு அணி ஜெய்ப்பூர் அணியை எதிர்கொள்கிறது. 

இன்றைய ஆட்டங்கள்

தமிழ்நாடு - ஜெய்ப்பூர்
(36-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி

குஜராத் - உத்தரப்பிரதேசம்
(37-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை, சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்

நேரு மைதானம் (எஸ்டிஏடி), சென்னை (பெரியமேடு), தமிழ்நாடு நேரடி முகவரி : ராஜாமுத்தையா சாலை, கண்ணப்பர் திடல், பெரியமேடு (சென்னை சென்ட்ரல்), சென்னை - 600003.

டிக்கெட்டுகள் பெற....
புரோ கபடி லீக் டிக்கெட்டுகள் பெற புக் மை ஷோ (BOOK MY SHOW) தளத்தில் பெறலாம். டிக்கெட்டுகள் பெற லிங்க் : https://in.bookmyshow.com/ (டிக்கெட் விலை ரூ.500 முதல் ரூ.6000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது)

டாப் 3-இல் ஜெய்ப்பூர்

புரோ கபடி தொடரின் முதல் சாம்பியன் மற்றும் நடப்பு சாம்பியன் ஆகிய சிறப்புகளுடன் விளையாடி வரும் ஜெய்ப்பூர் அணி, நடப்பு சீசன் தொடக்க ஆட்டங்களில் வெற்றியை குவிக்க முடியாமல் கடுமையாக திணறி வந்தது. கடந்த வாரம் புள்ளிப்பட்டியலில் 11-ஆவது இடத்தில் இருந்த ஜெய்ப்பூர் அணி நடப்பு வாரத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 இடங்கள் முன்னேறி தற்போது 3-ஆவது இடத்தில் உள்ளது. (வெள்ளியன்று மாலை நிலவரம்)

 

எல்லைமீறும் ஹரியானா பயிற்சியாளர்

எல்லைமீறும் ஹரியானா பயிற்சியாளர் புரோ கபடி தொடரில் ஹரியானா அணியின் பயிற்சியாளராக இருப்பவர் மன்பிரீத் சிங். இவர் கடந்த 2016 சீசனில் பாட்னா அணிக்காக விளை யாடிய நிலையில், 2019 சீசனில் திடீரென குஜராத் அணியின் பயிற்சியாளராக உருவெடுத்தார். இவரது பயிற்சியின் கீழ் குஜராத் அணி ஓரளவு வலு வான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 2022இல் ஹரியானா அணிக்கு பயிற்சியாளராக தாவி னார். மன்பிரீத் சிங் கடந்த 2 ஆண்டுகளாக (2 சீசன்) ஹரியானா அணிக்கு பயிற்சி அளித்து வரும் நிலை யில், நடப்பு சீசனில் பயிற்சியாளர் கட்டமைப்புக்கான ஒழுங்குமுறையில் இருந்து மாறி ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறார். ரெய்டு முடிந்த பின்பே பயிற்சியாளர்கள் அடுத்த கட்ட ஆலோசனையை வழங்குவார்கள். ஆனால் மன்பிரீத் சிங் ஒவ்வொரு ரெய்டுக்கும், தடுப்பாட்டத்திற்கும் கூக்குரலை வெளி படுத்தி வருகிறார். இவரது செயல்பாட்டால் ஹரியானா வீரர்கள் பெரும்பாலான நேரங்களில் பதற்றமாகவே விளையாடி வருகின்றனர். ஹரியானா வீரர்கள் மட்டுமின்றி அந்த அணிக்கு எதிராக விளை யாடும் எதிரணி வீரர்கள் கூட கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

ஐபிஎல் கம்பீரின் ஆதிக்கத்தால் கொல்கத்தா அணியின் நிலைமை என்ன ஆகப்போகிறதோ?

இந்திய அணியின் முன் னாள் தொடக்க வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கடந்த சீசனில் லக்னோ  அணியின் ஆலோசனையாள ராக இருந்தார். லக்னோ அணிக்கு கோப்பை வெல்லாததை கூட ரசிகர்கள் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் கோலியுடனான மோதல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளால் ரசிகர்கள்  மத்தியில் லக்னோ அணிக்கு இருந்த மரியாதையை கப்பலேறவிட்டுள்ளார் கம்பீர். அதாவது கடந்த சீசன்  ஐபிஎல் தொடரில் ரசிகர்களால் அதிகமாக வெறுக்கப் பட்ட அணி என்ற பெயரை லக்னோ அணி பெற்றது.  இந்நிலையில் வரவிருக்கும் 2024 சீசனில் லக்னோ அணி நிர்வாகம் கம்பீரை கழற்றிவிட்ட நிலை யில், முன்பு தான் விளையாடிய கொல்கத்தா  அணியின் ஆலோசகராக கம்பீர் நியமிக்கப்பட்டுள் ளார். பாஜகவில் இணைந்த பின்பும், எம்பி ஆன பின்பும் ஆதிக்க மனநிலையில் செயல்படும் கம்பீர் கொல்கத்தா அணியை என்ன செய்யப் போகிறாரோ? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. கொல்கத்தா அணியின் உரிமையாளராக நடிகர் ஷாருக்கான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.