விடைபெற்றார் வார்னர்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி தொடக்க வீரருமான டேவிட் வார்னர் (37) பாகிஸ்தான் அணிக்கு எதி ரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் வெற்றி மற்றும் அரை சதத்தோடு சர்வதேச டெஸ்ட் போட்டி களில் இருந்து விடைபெற்றார்.
ஆஸ்திரேலிய அணியின் உள்ளூர் அணியான நியூ சவுத் வேல்ஸ் அணி யில் திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் கடந்த 2009 ஜனவரி 11-ஆம் தேதி டி-20 மூலம் ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம்பிடித்த வார்னர், தொ டர்ந்து 2009 ஜனவரி 18-ஆம் தேதி ஒருநாள் அணியிலும் இடம்பிடித்து அணியின் முன்னணி வீரராக ஜொலித்தார்.
அதிரடி மனநிலை கொண்ட வார்ன ருக்கு டெஸ்ட் போட்டிக்கான குணம் இல்லாத நிலையிலும், மூத்த வீரர் என்ற அடிப்படையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2011இல் டெஸ்ட் போட்டியில் களமிறக்கியது. சூழ்நிலைக்கு ஏற்ப டெஸ்ட் போட்டியிலும் கலக்கியதால் கேப்டன், துணை கேப்டன் பதவி அளித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். கேப்டன், துணை கேப்டன் என இரு பதவிகளிலும் ஆஸ்திரேலிய அணியை நல்ல நிலையில் பயணிக்க வைத்த வார்னர் புத்திசாலியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு “செக்” வைக்கிறோம் என்ற பெயரில், கடந்த 2018இல் பந்துசேத சர்ச்சையால் துணை கேப்டன் பதவியை இழந்தது மட்டுமல்லாமல் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஓராண்டுக்கு பின் இடைநீக்க உத்தரவை ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்த பின்பு வார்னர் வழக்கம் போல தனது வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அணிக்கெ திரான தொடரோடு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பாகிஸ்தான் அணிக்கெதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சனியன்று நிறைவு பெற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி டெஸ்ட் மற்றும் கடைசி இன்னிங்ஸில் அரைசதமடித்து கண்ணீர் மல்க டேவிட் வார்னர் விடைபெற்றார். இதுவரை 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 26 சதம், 3 இரட்டை சதம், 37 அரைசதங்கள் என 8,786 ரன்கள் விளாசியுள்ளார்.
சிறப்பு பரிசுடன் வழி அனுப்பிவைத்த பாகிஸ்தான் வீரர்கள்
வார்னர் கடைசி டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய வந்த பொழுது பாகிஸ்தான் அணியின் அனைத்து வீரர்களும் அவரது மைதான வருகையை சிறப்பித்தனர். அதே போல போட்டி முடிந்தப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் கையெழுத்திட்ட தங்கள் நாட்டு ஜெர்சியை பரிசாக அளித்து டெஸ்ட் களத்தில் இருந்து வழியனுப்பி வைத்தனர்.
பிரிஸ்பேன் டென்னிஸ் இறுதியில் ரூனே, ரைபகினா
டென்னிஸ் உலகின் முக்கிய தொடர்களில் ஒன்றான பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், ஆடவர் ஒற்றையர் பிரிவு முத லாவது அரையிறுதி ஆட்டத்தில் டென் னிஸ் உலகின் முதல்நிலை வீரரான டென்மார்க்கின் ரூனே, தரவரிசையில் இல்லாத ரஷ்யாவின் ரோமனை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத் தில் 6-4, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் ரூனே வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
ரைபகினா மிரட்டல்
மகளிர் ஒற்றையர் பிரிவு முதலா வது அரையிறுதி ஆட்டத்தில் உலக தர வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் ரைபகினா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் தரவரிசை யில் இல்லாத செக்குடியரசின் இளம் வீராங்கனையான லிண்டாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.
ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிஆட்டங்கள் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.