games

img

தாஜ்மஹாலுக்கு கொண்டுவரப்பட்ட உலகக்கோப்பை!

இந்தியாவில் இன்னும் 50 நாட்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கும் நிலையில், ஐசிசி உலகக்கோப்பை தாஜ்மஹாலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதிவரை ஐசிசியின் 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் 10 நகரங்களில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும்  இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் போட்டியில் பங்கேற்கின்றன.
ஆகஆமதாபாத்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி, முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் சந்திக்கிறது.
இதனையொட்டி உலகக்கோப்பை சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது, அதன்படி உலகக்கோப்பை சுற்றுப்பயணத்தில் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு மக்கள் பார்வைக்குக் கோப்பை காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஐசிசி உலகக்கோப்பை இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, தாஜ்மகாலில் பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் ஆவலுடன் கண்டு ரசித்துவருகின்றனர். 

;