games

img

ஒலிம்பிக் திருவிழா - 2024

உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின் 
33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.

ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன் னேறினார். இறுதிப்போட்டி நடைபெற 12  மணிநேர இடைவெளி இருந்த நிலையில், எடை பரிசோதனையில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததை காரணம் காட்டி வினேஷ் போகத் ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

இந்திய ஒலிம்பிக் சங்கம் மேல்முறை யீடு செய்து போராடியும் எந்த பலனும் கிடைக்காத நிலையில்,  இறுதியில் வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் உறுதி  செய்யப்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்தது. 

செவ்வாயன்று இரவு முதல் எடையை  குறைக்க கடினமான உடற்பயிற்சி மேற் கொண்டதாலும், அதிகமான அளவில் ரத்தம் வெளியேற்றப்பட்டதாலும் நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட  வினேஷ் போகத் தீவிர உடல்நலக்குறைவு காரணமாக பாரீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், பாரீஸ் மருத்துவமனை யில் இருந்தே மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வினேஷ் போகத் கூறுகையில், “நான் தோற்றுவிட்டேன், மல்யுத்தம் வென்று விட்டது. என்னை மன்னிக்கவும், எனது தாயாரின் கனவும் என்னுடைய தைரியமும் உடைந்து போயுள்ளன. இனி மேலும் போராட என்னிடம் வலு வில்லை. மல்யுத்தத்திலிருந்து (2001 – 2024) விடைபெறுகிறேன். உங்கள் அனை வருக்கும் எப்போதும் கடமைப் பட்டுள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.

100 கிராம் என்றால் தலைமுடியை இன்னும் குறைத்து இருக்கலாமே?

இறுதிப்போட்டிக்கு முன்னர் புதனன்று மாலை வினேஷ் போகத் 150 கிராம் கூடுதலாக எடை கூடி யுள்ளதாகவும், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தொடக்கத்தில் தகவல் வெளி யாகியது. அதன் பின்னர் 100 கிராம் தான் எடை கூடுதலாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் கமிட்டியில் இடம்பெற்றுள்ள மருத்து வக்குழு தகவல் தெரிவித்தது. வெறும் 100 கிராம் என்றால் வினேஷ் போகத்தின் தலை முடியை இன்னும் குறைத்து  இருக்கலாம். பதற்றத்தில் இருந்த வினேஷ் போகத்திற்கு பயிற்சியாளர் மற்றும் இந்திய மருத்துவக்குழு இந்த யோசனையைக் கூட கூறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கென்யா வீராங்கனையின் தகுதி நீக்கம் ரத்து

வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து வாய்திறக்க மறுக்கும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம்

மகளிர் 5000 மீ ஓட்டப் பந்தயத்தில் கென்யாவின் பீட்ரைஸ் செபெட் முதலிடமும், மற்றொரு கென்ய வீராங்கனையான பெய்த் கிபிகோன் இரண்டாவது இடமும், நெதர்லாந்தின் சிபன் ஹாசன் மூன்றாவது இடமும் பிடித்தனர். வெள்ளிப்பதக்கம் வென்ற கென்யா வின் பெய்த் கிபிகோன் ஓட்டப்பந்த யத்தின் போது வெண்கல பதக்கம்  வென்ற நெதர்லாந்து வீராங்கனை சிபன் ஹாசனை முன்னேறி செல்வ தற்கு இடையூறு செய்ததாகவும், அவ ரை 2ஆம் இடம்பிடிக்கவிடாமல் களத்தில் தடங்கல் ஏற்படுத்தியதாக வும் குற்றம்சாட்டப்பட்டதால் கென்யா வீராங்கனை கிபிகோனின் வெள்ளிப்பதக்கம் பறிக்கப்பட்டு அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 

கென்ய ஒலிம்பிக் சங்கம், பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் மேல்முறையீடு செய்தது. உடனடி பேச்சுவார்த்தை மூலம் கிபிகோனின் தகுதிநீக்கம் ரத்துச் செய்யப்பட்டு அவருக்கான வெள்ளிப்பதக்கமும் உறுதிசெய்யப் பட்டது. ஆனால் மேல்முறையீடு செய்தும் வினேஷ் போகத் தகுதி நீக்க  விவகாரம் பற்றி பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டியும், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனமும் வாய் திறக்காமல் இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.