இந்திய விளையாட்டு உலகம் இனி அம்பானி கையில்!
அனைத்து நிகழ்வுகளும் வியாகோம், ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகிறது
தனது நண்பர் நரேந்திர மோடி பிர தமரான பின்பு உலகின் பெரும் பணக்காரராக உருவெடுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி, தற்போது ரூ. 9 லட்சம் கோடி கையிருப்புடன் உலக பணக்காரர் பட்டி யலில் 11-ஆவது இடத்தில் உள்ளார். அம்பானி டெலிகாம், பெட்ரோல் தொழில் மட்டுமல்லாது வியாகோம் (ஸ்போர்ட்ஸ் 18), ஜியோ சினிமா (ஒடிடி), கலர்ஸ் சினி பிளக்ஸ் உள்ளிட்ட விளையாட்டு சேனல் களையும் கைவசம் வைத்து கல்லா கட்டி வருகிறார்.
உலகின் முக்கிய பணக்காரர் ஆனது போல விளையாட்டு உலகையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அம்பானி தீவிரமாக இறங்கியுள்ளார். இதன் தொடக்கப்புள்ளியாக இந்திய விளை யாட்டு உலகில் தங்கள் சேனல்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு இலவச திட்டங் களை அறிவித்தார். இலவசங்கள் பல கொடுத்தாலும், தொழில்நுட்ப செயல் பாட்டில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனி ஸ்போர்ட்ஸ் ஆகிய சேனல்களின் ஆதிக்க த்தை அம்பானியின் விளையாட்டு சே னல்களால் முறியடிக்க முடியவில்லை.
உலக விளையாட்டு நிகழ்வுகள்
இதனால் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் ஆதரவு மூலம் உலகில் நடைபெறும் அனைத்து விளை யாட்டு நிகழ்வுகளையும் ஒப்பந்தம் செய்து ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் ஒளிபரப்பி னார் அம்பானி. அதாவது சிறுவர்கள் விளையாடும் தெரு விளையாட்டுப் போட்டி களை தவிர மற்ற அனைத்தையும் ஸ்போர்ட்ஸ் 18 சேனல் ஒளிபரப்பியது.
மேலும் இதற்காக ஸ்போர்ட்ஸ் 18 சேன லில் 3 பிரிவுகளையும் அம்பானி தொடங்கி னார். இந்தியாவில் தற்போதைய சூழ லில் விளையாட்டு உலகமே தனது சேனலில் ஒளிபரப்பாகுகிறது என்ற பிம்பத்தை உருவாக்கும் முனைப்பில் அம்பானி படுதீவிரமாக களமிறங்கி யுள்ள நிலையில், பிசிசிஐ ஆதரவுடன் தற்போது நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே யான டெஸ்ட் தொடரையும் அம்பானியின் ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனம் கைப்பற்றி ஒளிபரப்பி வருகிறது.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி விளையாடும் அனைத்து போட்டிகளை யும் (இந்திய மண்ணில்) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பும் நடைமுறை உள்ள நிலையில், திடீரென அம்பானியின் ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனம் ஒளிபரப்பு செய்து வருவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது நண்பர் மோடியின் ஆதரவு டன் உலகளவில் முக்கிய பணக்காரர் ஆனது போல, அதே ஆதரவுடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனி ஸ்போர்ட்ஸ் நிறு வனங்களை டம்மியாக்கி இந்திய விளை யாட்டு உலகின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றி கல்லா கட்டும் முனைப்பில் காய் நகர்த்தி வருகிறார் அம்பானி.