games

img

ஒலிம்பிக் திருவிழா - 2024

பாரீஸ், பிரான்ஸ் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை முடிவடைந்தது ஒலிம்பிக்

உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டித் தொடரான ஒலிம்பிக் தொடரின் 33ஆவது சீசன் கடந்த ஜூலை 26 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தொடங்கியது. கடுமையான வெயில், புழுதிப் புயலுக்கு (லேசான அளவில் - காற்றுமாசுபாடு ஏற்படும் அளவிற்கு) இடையே நடைபெற்ற இந்த ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள்  செலுத்தியுள்ள நிலையில், ஞாயிறன்று இரவு பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் அனைத்து பிரிவு விளையாட்டுப் போட்டிகளும் நிறைவு பெற்றன.

71ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மொத்தம் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த 117 பேர்களில் வெறும் 5 பேர் மட்டுமே சிறப்பாக விளையாடினர். மற்ற 111 பேர் (வினேஷ் போகத்தை சேர்க்க வில்லை) சொதப்பலாக விளையாடிய நிலையில்,  இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண் கலம் என 6 பதக்கங்களுடன்  பதக்கப்பட்டி  யலில் 71ஆவது இடத்திற்கு பின்னோக்கிச் சென்றுள்ளது. 

2020இல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு  தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 48 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, பாரீஸ் ஒலிம்பிக்கில் வீரர்கள் தேர்வு, மோடி அரசின் பாரபட்ச மான நடவடிக்கையால் 23 இடங்கள் பின்னோக்கி 71ஆவது இடத்தை பிடித்துள்ளது. 

உலக வரைபடத்தில் கண்ணுக்குத் தெரியாத குட்டி நாடுகள் கூட ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் தங்கம், வெள்ளி என பதக்கங்களை குவித்து முதல் 50 இடங்களில் உள்ளது. ஆனால் 148 கோடி  மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா பதக்கப்பட்டியலில் 71ஆவது இடத்தை பிடித்து குட்டி நாடுகள் இருக்கும் இடங்களில் இருப்பது சமூகவலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இமான் கலீப்-க்கு ஆதரவாக களமிறங்கும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம்

பாலினம் தொடர்பாக அவதூறு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாரீஸ் போலீசார் தீவிரம்

ஒலிம்பிக் தொடரின் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப் பிரிவில் அல்ஜீரியாவைச் சேர்ந்த இமான் கலீப் தங்கப்பதக்கம் வென்றார். இமான் கலீப் தனது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் இத்தாலியின் கரிணியை எதிர்கொண்டார். போட்டி யின் பொழுது இத்தாலியின் கரிணி, “இமான் கலீப் பெண் இல்லை. அவர் ஆண். இதனால் அவருடன் என்னால் விளையாட முடியாது” எனக் கூறி போட்டியில் இருந்து வெளியேறினார். 

இந்த சம்பவத்திற்கு பின் இமான் கலீப்பிறகு எதிராக கண்டனங்களும், ஆதரவான கருத்துக்களும் கிளப்பின. ஆனால் சிலர் கண்டனம் தெரி விப்பதாக கூறி இமான் கலீப்பிறகு எதிராக அவதூறுகளை பரப்பினர்.

இந்நிலையில், இமான் கலீப் தன்னுடைய பாலினம் தொடர்பாக அனைத்து ஆதார தகவல்களையும் வெளியிட்டு, தன் மீது அவதூறு பரப்புவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம், இந்த விவ காரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கு மாறு பாரீஸ் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. பாலினம் தெரிந்துதான் இமான் கலீப்-க்கு ஒலிம்பிக்கில் கள மிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதால், இமான் கலீப்-க்கு ஆதர வாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன மும் களமிறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்படலாம்

இமான் கலீப்-பிறகு எதிராக சமூகவலைத்தளங்களில் ஆபாச மீம்ஸ்களுடன் உலகம் முழுவதும் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன. அதனால் முதல் நடவடிக்கையாக அவதூறு கருத்துக்களை பரப்பிய நபர்களின்  சமூகவலைத்தள கணக்குகளை முடக்கிய பின்னர், சம்மந்தப்பட்ட சமூகவலைத்தள கணக்குகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாரீஸ் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மை  எனில் இமான் கலீப்-பிறகு எதிராக கருத்து தெரிவித்த அனைவரின் சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்படலாம்.