games

img

விளையாட்டு செய்திகள்

சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்க இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் விரும்பவில்லையா?

பி.டி. உஷாவின் பேச்சிற்கு வலுக்கும் கண்டனம்

பாரீஸ் ஒலிம்பிக் மல் யுத்தத்தில் மகளிருக் கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற எடை பரிசோதனையில் வினேஷ் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாகக் கூறி  தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கிய நிலையில், தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து சர்வதேச விளை யாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டு இருந்தார். வினேஷ் போகத்தின் மனுவை ஏற்றுக் கொள்ள நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், தனக்கு வெள்ளிப் பதக்கம் வேண்டும் என முறையிட்டார். 

இன்று தீர்ப்பு

இந்த மனுவை விசாரணைக்கு நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து வினேஷ் போகத்  தரப்பில் வாதாடுவதற்காக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான ஹரிஷ் சால்வே மற்றும் விதுஷ்பத் சிங்கானியா ஆகியோரை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது. வினேஷிற்கு வெள்ளிப் பதக்கம் அளிப்பது தொடர்பாக ஆகஸ்ட் 11 அன்று சர்வதேச விளை யாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்றைய தீர்ப்பு வழங்கா மல் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், செவ்வாயன்று வினேஷ் போகத் விவகாரம் தொடர்பாக சர்வதேச விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பை இந்திய நாடே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்க இந்திய  ஒலிம்பிக் சம்மேளனம் விரும்ப வில்லை என்ற தோணியில் பி.டி. உஷா  சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள் ளார்.

பி.டி. உஷா சர்ச்சை...

வினேஷ் போகத் விவகாரம் தொடர் பாக பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரு மான பி.டி. உஷா கூறுகையில், “மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச் சண்டை போன்ற விளையாட்டில் எடை யை நிர்வகிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். இதில் சம்பந்தப்பட்ட வீரர் - வீராங்கனைகள் இல்லை. அவர்களுடைய பயிற்சி யாளர்கள் மட்டுமே கவனம் செலுத்தி இருக்க வேண்டுமே தவிர இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தால் நியமிக்கப் பட்டுள்ள தலைமை மருத்துவ அதிகாரி  கிடையாது. நாங்கள் வைத்திருக்கும் மருத்துவ குழு ஏதேனும் வீரர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியாளர்கள் ஆவர். மருத்துவர் இல்லை என்றால் எங்கள் குழு அவர்களை கண்காணித்து உதவி செய்யும். மேலும் வீரர் - வீராங்கனை கள் காயமடைந்தால் அவர்களை எவ்வாறு மீண்டும் தகுதி பெற வைக்க  வேண்டும் என்பது குறித்து ஆலோச னை கொடுக்கும். ஆனால் இது தெரி யாமல் இந்திய ஒலிம்பிக் சம்மேளன மருத்துவக் குழு மீது அனைவரும் குற்றம் சாட்டுவதை என்னால் ஏற்க  முடியாது. இதற்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் குழுவை பற்றி முடிவு எடுப்ப தற்கு முன் அனைத்து விஷயங்களை யும் ஆராய வேண்டும்” என சர்ச்சைக் குரிய வகையில் கூறினார். ஒலிம்பிக்கில் விளையாடிய சீரிய அனுபவம் கொண்ட பி.டி. உஷாவின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

கண்டனம்

சர்வதேச நீதிமன்றத்தில் வினேஷ் போகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் சம்மேள னத்தின் தலைவரான பி.டி.உஷாவே  வீரர் - வீராங்கனைகள் தான் அனைத்து விவகாரத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி இருப்பது, மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக் கிறது. இதனால் வினேஷ் போகத் பதக்கம் வாங்குவதை இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் விரும்ப வில்லையா என்று இந்திய ரசிகர்கள் கொந்தளிப்பில் விமர்சனங்களை தொடுத்து வருகின்றனர்.