தாயகம் திரும்பியது 50.100 கிலோ தங்கம்
தேசிய கொடியுடன் தில்லி, ஹரியானாவில் வினேஷ் போகத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு
பாரீஸ் ஒலிம்பிக் தொட ரின் மகளிர் மல் யுத்தம் பிரிவில் 50 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்னர் 100 கிராம் கூடுத லாக இருந்ததாக கூறி சர்வதேச ஒலிம்பிக் மற்றும் மல்யுத்த சம்மேள னத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கத்தை எதிர்த்தும், குறைந்த பட்சம் வெள்ளிப்பதக்கம் வழங்கக் கோரியும், ஒலிம்பிக் சார்ந்த விளை யாட்டு தீர்ப்பாயத்திடம் வழக்கு தொ டர்ந்து போராடினார். வினேஷ் போகத்தின் வழக்கை விளையாட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
தங்கப்பதக்கம் வென்றவருக்கு கூட இப்படி வரவேற்பு கிடைத்திருக்காது
இந்நிலையில், வினேஷ் போகத் பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து சனியன்று காலை தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். வினேஷ் போகத்தை வரவேற்க அவரது உறவினர்கள், சொந்த கிராம மக்கள், ஹரியானா காங்கிரஸ் எம்.பி., தீபேந்தர் சிங் ஹூடா, விவசாய சங்கத்தினர், பாஜகவிற்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் தன்னு டன் இணைந்து போராடிய, சக மல் யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் என இந்திரா காந்தி சர்வதேச விமான நிலை யம் முன்பு பிரம்மாண்ட அளவில் கூட்டம் கூடியிருந்தது.
தில்லி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், தனக்கு கூடிய கூட்டத்தை கண்டு நெகிழ்ந்த வினேஷ் போகத் கண்ணீர் விட்டு கதறி அழு தார். சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, தீபேந்தர் சிங் ஹூடா ஆகியோர் ஆறு தல் கூறினர். வினேஷ் போகத்தை வரவேற்க பலாலி கிராமத்தில் இருந்து வந்தவர்கள் (வினேஷ் போகத் சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள்) மேள தாளங்களுடனும், பண மழையுடன் வரவேற்ற நிலையில், தொடர்ந்து திறந்தவெளி காரில் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, தீபேந்தர் சிங் ஹூடா ஆகியோருடன் “ரோடு ஷோ” சென் றார். ரோடு ஷோவின் பொழுது வழி நெடுகிலும் “நீங்கள் தான் தங்கப் பதக்க நாயகி” என வழிநெடுகிலும் சாலையோரத்தில் குவிந்து இருந்த பொதுமக்கள் முழக்கமிட்டனர்.
வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்று இருந்தால் கூட இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்காது என்று கூறும் அளவிற்கு மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார் வினேஷ் போகத்.
இதயங்களுக்கும் நன்றி
திறந்தவெளி காரிலேயே செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ்,”எனக்கு ஆதரவு அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு ஆதரவாக இருந்த அத்தனை இதயங்களுக்கும் நன்றி” என்று உணர்ச்சி பொங்க ஆனந்த கண்ணீருடன் கூறினார்.
ஹரியானாவிலும் பிரம்மாண்ட ஏற்பாடு
தில்லியில் இருந்து திறந்தவெளி காரிலேயே ஹரியானா சென்ற வினேஷ் போகத், தனது சொந்த கிராம மான சாக்ரி தாத்ரி மாவட்டத்தில் உள்ள பலாலி கிராமத்திற்கு சென்றார். வழிநெடுகிலும் ஹரியானாவின் 12 முக்கிய இடங்களில் வினேஷ் போகத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.