பாரீஸ் ஒலிம்பிக்
(தொடங்கும் நாள் : ஜூலை 26 - பிரான்ஸ்)
அட்டைப் படுக்கை விரிப்புகள்
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் கடும் எதிர்ப்பு
33ஆவது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் ஜூலை 26 அன்று தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள் என 15,000 பேர் ஒரே நேரத்தில் தங்குவதற்காக பாரீஸ் நகரின் மத்தியப் பகுதியில் பிரம்மாண்ட ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. நவீன அட்டைப் படுக்கை (கடினமான மெத்தை அமைப்பு) விரிப்புகள் மற்றும் ஏசி வசதி என ஒலிம்பிக் கிராம அறைகளில் பல்வேறு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர் - வீராங்கனைகள் அட்டைப் படுக்கை விரிப்புகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் வீரர் - வீராங்கனைகள் அட்டைப் படுக்கை அசவுகரியத்தை ஏற்படுத்துவதாக வீடியோ ஆதாரத்துடன் இன்ஸ்டாகிராம் தளத்தில் புகார் அளிப்பது போல தங்களது விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர்.
வீரர்களின் உழைப்பில் விளையாடும் பிரான்ஸ் அரசு
ஒலிம்பிக் தொடருக்காக வீரர் - வீராங்கனைகள் வருடக்கணக்கில் வீட்டிற்கு கூட செல்லாமல், பதக்கம் வெல்லும் வெறியோடு பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக் தொடரில் களமிறங்குகின்றனர். ஆனால் பாலியல் உள்ளிட்ட ஒரு சில காரணங்களுக்காக அட்டைப் படுக்கை களை ஒலிம்பிக் கிராமத்தின் அறைகளில் அமைத்துள் ளது பிரான்ஸ் அரசு. இது நல்ல முடிவுதான் என்றாலும் வீரர் - வீராங்கனைகளின் உடல்நலத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது சாதாரணமாக பயன்படுத்தும் மெத்தை அமைப்புக் கொண்ட படுக்கையை விட அட்டை படுக்கை அமைப்பு சற்று கடினமாக இருக்கும். இதனால் வீரர் - வீராங்கனைகளின் முதுகு மற்றும் தண்டுவடத்தில் தற்காலிக வலிகள் தோன்றும். இந்த வலிகள், நரம்பு மற்றும் தசைப்பிடிப்புகள் போட்டியின் போது காயங்களாக மாறும். வருடக்கணக்கில் ஒலிம்பிக் பதக்கத்திற்காக உயிரைகொடுத்து பயிற்சி பெறும் வீரர்கள் சாதாரண படுக்கை அமைப்பால் காயத்து டன் வெளியேறும் சூழல் ஏற்படும். இதனால் தான் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் அட்டைப் படுக்கை விரிப்புகளுக்கு எதி ராக வீரர் -வீராங்கனைகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இனி எதுவும் செய்ய முடியாது
ஒலிம்பிக் கிராமத்தில் அனைத்து அறைகளிலும் அட்டைப் படுக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. போட்டி தொடங்க இன்னும் 30 மணிநேரம் மட்டுமே உள்ளது. அதனால் இனி அட்டைப் படுக்கையை மாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் தொடரில் தமிழ்நாடு நட்சத்திரங்கள்
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் மொத்தம் 117 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் தமிழ்நாடு சார்பில் 13 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில், இந்திய அளவில் அதிக எண்ணிக்கையில் வீரர் - வீராங்கனைகளை பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு அனுப்பும் மூன்றாவது மாநிலம் தமிழ்நாடு ஆகும். ஹரியானா (24), பஞ்சாப் (19) ஆகிய மாநிலங்கள் முதல் 2 இடத்தில் உள்ளது.
1. ஜெஸ்வின் ஆல்ட்ரின் - ஆடவர் தடகளம் (நீளம் தாண்டுதல்)
2. பிரவில் சித்திரவேல் - ஆடவர் தடகளம் (மும்முறை தாண்டுதல் )
3. ராஜேஷ் ரமேஷ் - ஆடவர் தடகளம் (4×400 மீ தொடர் ஓட்டம்)
4. சந்தோஷ் தமிழரசன் - ஆடவர் தடகளம் (4x400 மீ தொடர் ஓட்டம்)
5. சுபா வெங்கடேசன் - மகளிர் தடகளம் (4×400 மீ தொடர் ஓட்டம்)
6. வித்யா ராம்ராஜ் - மகளிர் தடகளம் (4x400 மீ தொடர் ஓட்டம்)
7. நேதரர் குமணன் - படகு (மகளிர் - டிங்கி)
8. விஷ்ணு சரவணன் - படகு (ஆடவர் - டிங்கி)
9. இளவேனில் வளரிவன் - துப்பாக்கி சுடுதல் (மகளிர் 10 மீ ஏர் ரைபிள், 10 மீ ரைபிள் கலப்பு அணி)
10. பிருத்விராஜ் தொண்டைமான்-துப்பாக்கி சுடுதல் (ஆடவர் - டிராப்)
11. சத்யன் ஞானசேகரன் - டேபிள் டென்னிஸ் (ரிசர்வ்)
12. ஷரத் கமல் - டேபிள் டென்னிஸ் (ஆடவர் - தனிநபர், கலப்பு)
13. ஸ்ரீராம் பாலாஜி - டென்னிஸ் (ஆண்கள் அரட்டையர்)