games

img

விளையாட்டு...

ஐசிசியின் அடுத்த தலைவராகுகிறார் அமித் ஷா மகன் ஜெய் ஷா?

குஜராத் முதல்வராக மோடி இருந்த பொழுது, குஜராத் மாநில கிரிக்கெட் சங்கம் மோடி - அமித் ஷா - ஜெய் ஷா கட்டுப்பாட்டில் இருந்தது.  அதே போல மோடி நாட்டின் பிரதமர் ஆன பின்பு இந்திய கிரிக்கெட் வாரி யம் (பிசிசிஐ) பாஜக -  அமித் ஷா - ஜெய் ஷா கட்டுப்பாட்டில் உள்ளது. பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா தனது உள்ளங்கையில் வைத்து இந்திய கிரிக்கெட் வாரி யத்தை ஆட்டிப்படைத்து வருகிறார். அதாவது பாஜக மற்றும் இந்துத்துவா அரசியல் நிரலுக்கு ஏற்ப காவி உடை பண வருவாய் உள்ளிட்ட பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கிரிக்கெட் விளை யாட்டைப் பற்றி கொஞ்சம் கூட தெளிவு இல்லாத ஜெய் ஷா மோடி அரசின் ஆதரவோடு சர்வதேச கிரிக்கெட் வாரியத் (ஐசிசி) தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசியின் தற்போதைய தலைவராக இருக்கும் கிரேக் பார்க்லேவின் (நியூஸிலாந்து) பதவிக்காலம் வரும் நவம்பருடன் முடி வடைய உள்ள நிலையில், ஏற்கெனவே 2 முறை பொறுப்பு வகித்ததால் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்து விட்டார். இதனால் ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆகஸ்ட் 27 அன்றுக்குள் வேட்புமனுக்களை அளிக்கலாம் என்று ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐசிசி விதிகளின்படி, தலைவர் தேர்தலுக்கு 16 வாக்குகள் தேவை. தற்போது இந்த 16 வாக்குகளும் ஜெய்  ஷாவுக்கு உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி வருவதால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ஐசிசியின் அடுத்த தலைவராகுகிறார் என வியூகங்கள் வெளியாகி வருகின்றன.

ஹன்ட்ரட் லீக்கில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு அழைப்பு

ஐபிஎல் தொடரை போன்று பல் வேறு நாடுகளும் டி-20 லீக் தொடரை நடத்தி வருகின்றன. ஆஸ்திரேலிய நாடு பிக் பேஷ் என்ற பெயரிலும், கரீபியன் நாடுகள் சிபிஎல் என்ற பெயரிலும், பாகிஸ்தான் நாடு பிஎஸ்எல் என்ற பெயரிலும், தென் ஆப்பிரிக்கா நாடு எஸ்ஏ என்ற பெயரிலும், இலங்கை நாடு எல்பிஎல் என்ற பெயரிலும், இங்கிலாந்து நாடு ஹன்ட்ரட் லீக் என்ற பெயரிலும்  டி-20  தொடர்களை நடத்தி வருகிறது. இதில் ஹன்ட்ரட் லீக் 2 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து வாரியத்தால் தொடங் கப்பட்டது. 100 பந்துகளை (15 ஓவ ர்கள்) வைத்து விளையாடும் இந்த ஹன்ட்ரட் லீக் தொடர் ஐபிஎல் தொட ரை போலவே நகரங்களை மையமாக வைத்து பெயரிடப்பட்டன.

தற்போது ஹன்ட்ரட் லீக் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அதன் பார்வையாளர்கள் எண்ணி க்கையை கணக்கிடும் டிஆர்பி கடந்த சீசனை விடவும் இந்த சீசனில் குறைந் திருப்பது தெரிய வந்துள்ளது. ஹன்ட்ரட் லீக் தொடரை ஒளிபரப்பிய ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தரப்பில், கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு ஆடவர் லீக் தொட ருக்கான பார்வையாளர்கள் எண்ணி க்கை 28% குறைந்துள்ளது. அதே போல மகளிர் ஹன்ட்ரட் லீக் தொட ருக்கான பார்வையாளர்கள் எண்ணி க்கை 41% வரை குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி நடந்த போதும் பார்வையா ளர்கள் எண்ணிக்கை அதிகரிக்காதது ஒளிபரப்பாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இதனால் ஹன்ட்ரட் லீக் தொட ரை முதலீடு செய்ய ஐபிஎல் உரிமை யாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதுவரை 3 சீசன் முடி வடைந்த நிலையில், முதலீட்டாளர் கள் பலருக்கும் எதிர்பார்த்த அளவிற் கான லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எஸ்ஏ-20, எமிரேட்ஸ் லீக், எம்எல்சி உள்ளிட்ட தொடர்களில் முதலீடு செய்துள்ள இந்திய தொழி லதிபர்களான  அம்பானி, சஞ்சீவ் கோயங் கா, காவ்யா மாறன், பார்த்  ஜிண்டால் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நட த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து மண்ணில் எடுபடுமா?

இங்கிலாந்து நாட்டில் கிரிக்கெட் ஆர்வமான விளையாட்டுப் பட்டியலில் இருந்தாலும், அந்நாட்டு மக்களின் விளையாட்டு மீதான எதிர்பார்ப்பு சற்று வேறு மாதிரியாக இருக்கும். அதாவது இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பாரம்பரியத்தின் மீது அதிக பற்று கொண்டவர்கள். தற்போதைய  கிரிக்கெட் உலகில் குறைவான நேரம் நடைபெறும் டி-20 போட்டிகள் மீது அதிக கவனம் திரும்பினாலும், இங்கிலாந்து நாட்டினர் பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் மீதே ஆர்வமாக உள்ளார்கள்.  5 நாட்களும் சளைக்காமல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்காக மைதானத்திலேயே குடியிருப்பார்கள். அதே போல ஒருநாள், டி-20 போட்டிகள் என்றால் இங்கிலாந்து நாடு விளையாடினால் மட்டுமே மைதானம் செல்வார்கள். விட்டாலிட்டி (இங்கிலாந்து உள்ளூர் டி-20 லீக்) போன்ற உள்ளூர் டி-20 போட்டி களுக்கு இங்கிலாந்து ரசிகர்கள் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். விட்டாலிட்டி உள்ளூர் டி-20 போட்டிகளை இங்கிலாந்தின் இளசுகள் மட்டுமே காண செல்கிறது. விட்டாலிட்டி நிலைமை தான் தற்போது ஹன்ட்ரட் லீக் தொடருக்கும் அடி மேல் அடி கிடைத்துள்ளது. என்ன தான் இந்தியர்கள் முதலீடு செய்தாலும் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும்.