பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில், இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் அல்பேனியாவின் ஜெலிம்கான் அபகரோவை, 12-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இன்று(ஆக. 8) இரவு 9:45 மணிக்கு நடக்கும் அரையிறுதிப் போட்டியில் அமன், ரியோ ஒலிம்பிக்கில் 2016 வெள்ளிப் பதக்கம் வென்ற ஜப்பானின் முதல்நிலை வீரரான ரெய் ஹிகுச்சியை எதிர்கொள்கிறார். பாரீஸ் 2024 இல் இந்தியாவிற்கான முதல் மல்யுத்தப் பதக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அவர் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் போதுமானதாகும்.