ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுன்டர் முகமது நபி “சாம்பியன்ஸ் டிராபி 2025” உடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
39 வயதாகும் முகமது நபி 2009இல் ஸ்காட்லாந்துக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். இதுவரை, 165 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3,549 ரன்கள் 171 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். வங்கதேசத்துடனான முதல் போட்டியில் 82 ரன்கள் அடித்து அசத்தினார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 க்கு 0 என ஆப்கானிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகையில்; முகமது நபி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். சாம்பியன்ஷ் டிராபியுடன் ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார் என கூறியது.