யு-19 கிரிக்கெட் உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை நேற்று (சனிக்கிழமை) எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய யு-19 அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் வங்கதேசப் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினர். ஹர்னூர் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இருப்பினும், அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் ஷேக் ரஷீத் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் சேர்த்து விளையாடினர். இந்தியா மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் கேப்டன் யாஷ் மற்றும் கௌசல் தாம்பே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 30.5 ஓவர்களில் இலக்கை மாற்றி வெற்றியை உறுதி செய்தனர்.
அதனைதொடர்ந்து பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்கிறது.