games

img

சர்வதேச தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!  

சைப்ரஸில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் 100 மீட்டர் தடைத்தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யாரஜி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  

ஆந்திராவை சேர்ந்த 22 வயதான ஜோதி யாரஜி 13.23 வினாடிகளில் கடந்த புதிய உலக சாதனையை படைத்தார். சைப்ரஸின் நடாலியா கிறிஸ்டோபி 13.34 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கத்தையும், கிரீஸின் அனோயிஸ் கரகியானி 13.47 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.  

கடந்த 2002 ஆம் ஆண்டு 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தை இந்தியாவின் அனுராதா பிஸ்வால் 13.38 நொடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார்.

கடந்த 20 வருடங்களாக அவருடைய சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதி யாரஜி புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார்.  

இதனால் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.